Don't Miss!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வெளிநாடு 'பறக்கும்' சோனா!!
எஸ்பிபி சரண் என்னிடம் பகிரங்கமாக, அதுவும் மீடியா முன்பாக வந்து மன்னிப்பு கேட்டால்தான் வழக்கு வாபஸ் என்று கூறிவந்த சோனா, நேற்று வரை தனது முடிவில் உறுதியாக இருந்தார்.
ஆனால், போலீஸார் இந்த வழக்கில் யாருக்கு சாதகமாக உள்ளனர், அவர்களின் 'ட்ரீட்மென்ட்' போன்றவை புரிந்ததும், தானாகவே அமைதியாகிவிட்ட சோனா, இன்று இந்த வழக்கையே வாபஸ் பெறுவதாகக் கூறிவிட்டார். சரணை தான் மன்னித்துவிட்டதாகவும் கூறினார்.
ஆனால், இந்த விவகாரத்தில் பிரதானமாகக் குற்றம்சாட்டப்பட்ட சரண், இதுவரை எதுவுமே பேசவில்லை. அவர் சார்பாக பேச வேண்டியதையெல்லாம் 'மேலிட அறிவுறுத்தலின் படி' போலீசாரே 'பேசிவிட்டதாக' விவரமறிந்த வட்டாரம் தகவல் தெரிவிக்கிறது.
இந்த நிலையில், சரணை மன்னித்ததாக அறிவித்த கையோடு, வெளிநாடு பறந்துவிட்டார் சோனா. போவதற்கு முன் நிருபர்களிடம் பேசிய சோனா, மனசே சரியில்ல. எதையும் வெளிப்படையா பேச முடியாத நிலை. நான் எல்லாவற்றையும் மறந்துட்டேன். கொஞ்ச நாளைக்கு வெளிநாட்டில் இருந்து மனசை தேத்திக்கிட்ட பிறகு வரலாம்னு ப்ளான் பண்ணியிருக்கேன்," என்றார் சோகமாக.
அத்தனை பலமாக இருந்திருக்கிறது 'மேலிடத்து அட்வைஸ்'!