விலங்குகள் மீது அன்பு காட்டுவோம்-சதா அழைப்பு

People for the Ethical Treatment of Animals என்ற பெடா அமைப்பு விலங்குகளை சித்திரவதைப்படுத்துவது, அவற்றின் தோல்களை பயன்படுத்தி உடைகள் உள்ளிட்டவற்றை தயாரி்ப்பது ஆகியவற்றுக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது. இதில் பல பிரபலங்களையும் ஈடுபடுத்துகிறது.
இந்த அமைப்பின் சார்பாக பல்வேறு நடிகர், நடிகையர் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். இந்த வரிசையில் தற்போது சதாவும் பெடாவுக்காக குரல் கொடுக்க முன்வந்துள்ளார்.
கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்புக்காக அமிர்தாஞ்சன் நிறுவனம் மாதந்தோறும் ரூ.1 லட்சம் வழங்கி வருகிறது. இதற்கான நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட நடிகை சதா, நானும் ஒரு பிராணிகள் பிரியர்தான்.
செல்லப்பிராணிகள் வளர்ப்பிலும், ஆதரவற்று திரியும் விலங்குகள் பராமரிப்பிலும் அனைவரும் ஆர்வமுடன் பங்கெடுக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொண்டார்.
பெடா அமைப்புக்காக திரிஷா ஏற்கனவே குரல் கொடுத்து வருகிறார். இந்த வரிசையில் தற்போது சதாவும் இணைந்துள்ளார்.
சதா சினிமாத்தனமாக இல்லாமல் இப்படியும் நல்ல விஷயத்திற்காக நடிகைகள் குரல் கொடுப்பது சந்தோஷமாக இருக்கிறது


Click it and Unblock the Notifications











