மீண்டும் செல்வராகவனுடன் இணைவாரா சோனியா அகர்வால்?

இயக்குநர் செல்வராகவனும், சோனியா அகர்வாலும் நீண்ட காலம் காதலித்து பின்னர் மணம் புரிந்து கொண்டனர். இந்த ஜோடி எப்படி நிலைக்கப் போகிறது என்று அப்போதே பேச்சு எழுந்தது. அதே போலவே நடந்தும் போனது.
கல்யாணமான வேகத்திலேயே இருவரும் பிரிந்தனர். இப்போது தனித் தனி பறவைகளாக வசித்து வருகின்றனர். திருமண முறிவுக்குப் பின்னர் நடிக்க முயற்சித்து வந்தார் சோனியா. இருப்பினும் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கவில்லை. டிவி சீரியலிலும் நடித்துப் பார்த்தார், தேறவில்லை.
அதேசமயம், தனது சொந்த ஊருக்குப் போகாமல் தொடர்நது சென்னையிலேயே இருந்து வருகிறார் சோனியா. பட விழாக்களுக்கு போய் வந்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் மீண்டும் செல்வராகவனுடன் அவர் இணைய முயற்சிப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதை உறுதிப்படுத்த முடியவில்லை. இருப்பினும் சோனியா தரப்பிலிருந்தே முயற்சிகள் தொடங்கியுள்ளதாக கூறுகிறார்கள். அதேசமயம், செல்வராகவன் தரப்பிலிருந்து இதுவரை பதில் ஏதும் வரவில்லையாம்.
சோனியாவும், செல்வராகவனும் மீண்டும் இணைந்து வாழ வேண்டும் என சோனியாவின் தாயாரும் தீவிரமாக உள்ளாராம். அதேபோல, செல்வராகவன் மீது தான் கொண்ட சந்தேகங்களில் சில தவறு என்பதை இப்போது சோனியா புரிந்து கொண்டுள்ளாராம். இதனால்தான் மீண்டும் சேர்ந்து வாழ விரும்புவதாக கூறப்படுகிறது.
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, உரியவர்களுக்குப் புரிந்தால் சரி...!


Click it and Unblock the Notifications











