Don't Miss!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க கண்ண மூடிக்கிட்டு காதலில் விழுந்துருவாங்களாம்... ரொமான்ஸ்ல இவங்கள அடிச்சுக்க ஆளே இல்ல...!
- Automobiles சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
- News சிலிர்த்த வன்னியர்! விசிக திருமா எம்பியாவது ஏன் முக்கியம்? அடித்து பேசிய சிவசங்கர்! இதான் தமிழ்நாடு
- Sports அங்க உயிரைக் கொடுத்து விளையாடுறாங்க.. ஒரு கேப்டனா நீ என்ன பண்ணிருக்கனும்.. ஹர்திக்கை பொளந்த பதான்!
- Technology பட்டிதொட்டியெல்லாம் கலக்கும் BSNL.. மாதம் ரூ.99.. 365 நாள் வேலிடிட்டி.. கம்மி காசில் ஓஹோனு நன்மை..
- Finance அமெரிக்கா தொட முடியாத உயரத்தை இந்தியா தொட்டது.. பங்குச்சந்தையில் புதிய மாற்றம்..!!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
மத உணர்வுகளை புண்படுத்தியதாக நடிகை ரவீணா டாண்டன் உட்பட 3 பேர் மீது மீண்டும் வழக்குப் பதிவு
பெரோஸ்புர்: கிறிஸ்தவ மத உணர்வுகளை புண்படுத்தியதாக, இந்தி நடிகை ரவீணா டாண்டன் உட்பட மூன்று பேர் மீது போலீசார் இரண்டாவது வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, பஞ்சாப் டி.வி.சேனல் ஒன்றில் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதில், இந்தி நடிகை ரவீணா டாண்டன், நடன இயக்குனரும் பட இயக்குனருமான பரா கான், காமெடி நடிகர் பார்தி சிங் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் அவர்கள், கிறிஸ்துவர்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில், பேசியதாக அமிர்தசரஸ் போலீசில், கிறிஸ்துவ முன்னணி சார்பில் புகார் கொடுக்கப்பட்டது.
வழக்குப் பதிவு
இதையடுத்து, மூவர் மீதும், அமிர்தசரஸ் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர். இந்நிலையில் பாரா கான், மன்னிப்புக் கேட்டார். எல்லா மதத்துக்கும் மரியாதை கொடுப்பவள் நான்.
மன்னிப்பு
மத உணர்வுகளை புண்படுத்தும்படி நாங்கள் பேசவில்லை. அப்படி பேசியிருப்பதாக நினைத்தால் அனைவர் சார்பிலும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.
ரவீணாவும்...
இதையடுத்து ரவீணாவும் மன்னிப்புக் கேட்டிருந்தார். எந்த மதத்தையும் புண்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை. அப்படி புண்ணியிருப்பதாக இருந்தால், மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.
இரண்டாவது வழக்கு
இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் கம்போத் நகரைச் சேர்ந்த ஒருவர் கொடுத்த புகாரை அடுத்து அவர்கள் மீது இரண்டாவது வழக்குப் பதியப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.