Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கல்யாண வதந்தியால் எனது குடும்பத்தில் பிரச்சினை-ஜெனிலியா
பாய்ஸ் படம் மூலம் நடிகையான ஜெனிலியி டிசவுசா இப்போது இந்தியிலும் பிரபலம். அவரும் ரிதேஷ்தேஷ்முக்கும் நீண்ட காலமாக காதலித்து வருகிறார்கள். இந்த காதலுக்கு இரு வீட்டுப் பெரியவர்களும் இதுவரை பச்சைக் கொடி காட்டவில்லை. இருந்தாலும் காதல் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் இருவரும் கல்யாணம் செய்து கொண்டு விட்டதாகவும், ஒரே வீட்டில்தான் குடித்தனம் நடத்துவதாகவும் செய்திகள் வெளியாகின. இதைக் கேட்டு ஜெனிலியா அப்செட்டாகியுள்ளாராம்.
இதுகுறித்து ஜெனிலியா கூறுகையில், எனது காதல் எனது தனிப்பட்ட விஷயம். ஆனால் கல்யாணம் செய்து கொண்டு விட்டேன் என்று கூறுவதெல்லாம் தவறு. அந்த செய்தியால் எனது குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு விட்டது.
நான் ரகசியமாக கல்யாணம் செய்து கொள்ளும் அளவுக்கு கோழை இல்லை. அதற்கான அவசியமும் எனக்கு இல்லை. எதைச் செய்தாலும் சொல்லி விட்டுத்தான் செய்வேன் என்கிறார் ஜெனிலியா.