Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கல்யாண வதந்தியால் எனது குடும்பத்தில் பிரச்சினை-ஜெனிலியா
பாய்ஸ் படம் மூலம் நடிகையான ஜெனிலியி டிசவுசா இப்போது இந்தியிலும் பிரபலம். அவரும் ரிதேஷ்தேஷ்முக்கும் நீண்ட காலமாக காதலித்து வருகிறார்கள். இந்த காதலுக்கு இரு வீட்டுப் பெரியவர்களும் இதுவரை பச்சைக் கொடி காட்டவில்லை. இருந்தாலும் காதல் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் இருவரும் கல்யாணம் செய்து கொண்டு விட்டதாகவும், ஒரே வீட்டில்தான் குடித்தனம் நடத்துவதாகவும் செய்திகள் வெளியாகின. இதைக் கேட்டு ஜெனிலியா அப்செட்டாகியுள்ளாராம்.
இதுகுறித்து ஜெனிலியா கூறுகையில், எனது காதல் எனது தனிப்பட்ட விஷயம். ஆனால் கல்யாணம் செய்து கொண்டு விட்டேன் என்று கூறுவதெல்லாம் தவறு. அந்த செய்தியால் எனது குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு விட்டது.
நான் ரகசியமாக கல்யாணம் செய்து கொள்ளும் அளவுக்கு கோழை இல்லை. அதற்கான அவசியமும் எனக்கு இல்லை. எதைச் செய்தாலும் சொல்லி விட்டுத்தான் செய்வேன் என்கிறார் ஜெனிலியா.