Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நமீதா வீட்டில் தீ விபத்து!
கவர்ச்சி மோகினி நமீதா நுங்கம்பாக்கத்தில் பெரிய பங்களாவில் வாடகைக்கு வசித்து வருகிறார். வீட்டில் நமீதாவும், வீட்டு வேலைக்காரர்களும் மட்டும்தான் இருக்கின்றனர். இவர்கள் தவிர மூன்று மெகா சைஸ் நாய்களும் வீட்டில் இருக்கின்றன.
இவர்களும் போக ஒரு கூர்க்காவும் பாதுகாப்புக்கு இருக்கிறார்.
நேற்று முன் தினம் இரவு 8 மணியளவில் இந்திரவிழா படப்பிடிப்பு முடிந்து நமீதா வீடு திரும்பினார். படு டயர்ட் ஆக இருந்தவர் நேராக படுக்கை அறைக்குப் போய் ஏசியைப் போட்டுள்ளார்.
ஏசி மெஷின் ஓட ஆரம்பித்தது. ஆனால் சிறிது நேரத்திலேயே திடீரென தீப்பிடித்து அறை முழுவதும் புகை குபுகுபுவென பரவியது. பயந்து அலறிய நமீதாவின் குரலைக் கேட்டு வேலைக்காரர்கள் ஓடி வந்து அவரை வெளியேற்றினர்,
பின்னர் மெயின் சுவிட்ச்சை ஆப் செய்து ஏசியை நிறுத்திவிட்டு தீயை அணைத்துள்ளனர். தூங்கும் முன்பே இந்தச் சம்பவம் நடந்ததால் நமீதா உடனே தப்பியுள்ளார்.