Don't Miss!
- News அடேங்கப்பா.. நம்ப முடியாத வகையில் இந்தியாவின் உள்கட்டமைப்பு! மோடியை பாராட்டிய அமெரிக்க வங்கி சிஇஓ
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Lifestyle கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தப்பினார் ஆசின்!
ஓகனேக்கல் விவகாரம் தொடர்பாக சென்னையில் திரையுலகினர் நடத்திய உண்ணாவிரதத்தில் ஆசின் உள்பட பலரும் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து வராதவர்களுக்கு விளக்கம் கேட்டு நடிகர் சங்கம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
நோட்டீஸ் பெறப்பட்ட அனைவரும் விளக்கம் அளித்து விட்டனர். ஆனால் ஆசின் மட்டும் அனுப்பாமல் இருந்தார். இதையடுத்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதை அறிந்த ஆசின் உடனடியாக விளக்கத்தை அனுப்பி வைத்தார்.
மேலும், நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி உள்ளிட்ட நிர்வாகிகளை கடந்த சனிக்கிழமை நேரில் சந்தித்தும் விளக்கம் அளித்தார் ஆசின்.
அவரது விளக்கத்தைக் கேட்டு திருப்தி அடைந்த நடிகர் சங்க நிர்வாகிகள், ஆசின் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
இதுகுறித்து நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கூறுகையில், ஆசின் மீது எந்தத் தவறும் இல்லை. அவருக்கு சரியான முறையில் செய்தி போய்ச் சேரவில்லை. எனவே அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது.
மற்றவர்களிடமிருந்தும் விளக்கங்கள் வந்துள்ளன. அதுகுறித்து விசாரணை நடத்திய பின்னர் முடிவெடுக்கப்படும் என்றார்.
ஆசின் நடிகர் சங்க நிர்வாகிகளிடம் அளித்த நேரடி வாக்குமூலத்தில், வராததற்காக மிகவும் வருத்தப்படுகிறேன். கஜினி இந்திப் படப்பிடிப்பில் நான் மாட்டிக் கொண்டு விட்டேன். மேலும் எனக்கு உண்ணாவிரதம் குறித்து யாரும் சொல்லவில்லை. எனவே அதுகுறித்து எனக்குத் தெரியாது.
மேலும் தமிழ்நாடு, கர்நாடகம் இடையிலான காவிரிப் பிரச்சினை குறித்தும் எனக்குத் தெரியாது என்று கூறினாராம் ஆசின்.
இந்த விளக்கத்தைக் கொடுத்து விடடு அன்று மாலையே விமானத்தைப் பிடித்து ஹைதராபாத் பறந்து போய் விட்டாராம் ஆசின்.