Don't Miss!
- News கட்டுக்கதை அவிழ்த்து விடுறாங்க.. குடும்பத்தினரை பற்றி அவதூறு பரப்புறாங்க.. சசிகாந்த் செந்தில் பளீர்
- Education தமிழக கல்லூரி மாணவர் பதிவு விண்ணப்ப சாளரத்தில் மாற்றம்...!
- Lifestyle இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Technology பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- Automobiles ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
சீரியல் நடிகையானார் மதுபாலா-ஜெயா டிவி தொடரில் நடிக்கிறார்
நடிகை ஹேமமாலினியின் உறவினர் மதுபாலா. ரோஜா படத்தில் நாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் பல படங்களில் நடித்த மதுபாலா பின்னர் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலானார். இரண்டு குழந்தைகளும் உள்ளன. அமயா, கேயா என இரண்டு குழந்தைகள். முதல் குழந்தைக்கு 10 வயதும், 2வது குழந்தைக்கு 8 வயதும் ஆகிறதாம்.
இப்போது மீண்டும் நடிக்க வந்து விட்டார் மதுபாலா. இந்த முறை அவர் டிவி பக்கம் வந்துள்ளார்.
குட்டி பத்மினியின் கணவர் பிரபு நேபால் தயாரித்து, இயக்கும் செளந்தரவல்லி என்ற மெகா தொடரில் நாயகியாக வருகிறார் மதுபாலா.
இதில் அவருக்கு தாசி வேடம். அதேசமயம், தாசிகுலத்தின் அவலத்தைத் துடைத்து சமூக நீதிக்காக போராடும் கேரக்டராம் மதுபாலாவுக்கு.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்க வந்ததால் முதல் ஷூட்டிங்கின்போது சற்று பதட்டமாக இருந்ததாம் மதுபாலாவுக்கு. முதல் காட்சிக்கு நான்கு டேக்குகள் வாங்கினாராம். அதன் பின்னர் படிப்படியாக இயல்பாகி ஒரே டேக்கில் ஓ.கே செய்ய ஆரம்பித்தாராம்.
இது எனக்கு மறு வருகை. டிவி தொடரில் நடிப்பதற்காக நான் வருத்தப்படவில்லை. இதுவும் நடிப்புதான். நான் டிவியில் நடிப்பதை எனது தோழிகளான ரம்யா கிருஷ்ணன், குஷ்பு ஆகியோர் வரவேற்று உற்சாகப்படுத்தினர் என்றார் மதுபாலா.