Don't Miss!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பூமிகாவின் 'ஆனந்தம் ஆயிரம்'
சில்லுன்னு ஒரு காதல் படத்துக்குப் பிறகு கல்யாணம் பண்ணிக்கொண்டு செட்டிலாகிவிட்ட பூமிகா, அதன் பிறகு நடித்த தெலுங்குப் படம் சத்யபாமா. இந்தப் படம்தான் இப்போது தமிழில் ஆனந்தம் ஆயிரமாக தயாராகிக் கொண்டிருக்கிறது. இதில் பூமிகாவுக்கு ஜோடி சிவா எனும் புதுமுகம்.
ரங்கீலா எண்டர்பிரைசஸ் சார்பில் சித்திரைச் செல்வன் மிகப் பிரமாண்டமாகத் தயாரிக்கிறார்.
இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் திரைப்படக் கல்லூரி மாணவர் நானு ஹரி. தமிழில் இவருக்கு முதல் படம் இதுதான்.
படம் குறித்து இயக்குநர் ஸ்ரீஹரி இப்படிக் கூறுகிறார்:
"சந்தோஷத்தைச் சந்தோஷமா சொல்லணும். ஆனா கஷ்டத்தை சந்தோஷமா சொல்வது கயிறு மேல் நடப்பது மாதிரி சாகஸமான வேலை. கொஞ்சம் தவறினாலும் கவுந்திடும். அந்த மாதிரி ஒரு ஸ்கிரிப்ட்தான் இந்தப் படம்.
இந்த ஸ்கிரிப்டை உருவாக்கும்போது எனக்கு என்ன உணர்வு இருந்ததோ அதே உணர்வு படம் பார்ப்பவர்களுக்கும் வரும். காதலுக்கு அந்த வலிமை உண்டு. காதலின் வலியையும் சுகத்தையும் அனுபவிக்கிற மாதிரியான காட்சிகள் இந்தப் படத்தில் நிறையவே இருக்கு.
இந்தக் கதையை நான் முதலில் தெலுங்கில்தான் பண்ணினேன். சத்யபாமா எனும் பெயரில் வெளியான இப்படத்துக்கு நல்ல வரவேற்பு. இளைஞர்கள், குடும்பஸ்தர்கள் என பேதமின்றி எல்லோரும் நூறு சதவிகிதம் ரசித்துப் பார்த்த படம் இது. வெளிநாடுகளிலும் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு.
பூமிகாவோட கேரியர்ல பெருமையா சொல்லிக்கிற படமா இது இருக்கும்னு எல்லாரும் சொன்னாங்க. அந்த அளவு கேரக்டராவே ஒன்றிப்போய் வாழ்ந்திருப்பாங்க பூமிகா.
இந்தக் கதையை எடுக்கும்போது என்ன நம்பிக்கை இருந்ததோ அதே மாதிரி படத்தின் வெற்றியும் இருந்தது. அந்தப் படம்தான் இப்போது ஆனந்தம் ஆயிரமாக தமிழுக்கும் வருகிறது. நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்..."
எப்போதுமே தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்கு நல்ல பலன் இருக்கத்தானே செய்கிறது!
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!