Don't Miss!
- News 320 ஆக உயர்ந்த சர்க்கரை அளவு.. திகார் சிறையில் கெஜ்ரிவாலுக்கு முதல் முறையாக இன்சுலின் ஊசி
- Lifestyle சித்ரா பெளர்ணமி.. திருவண்ணாமலையில் குவியும் பக்தர்கள்.. கிரிவலம் செல்ல நல்ல நேரம் எது?
- Technology இது தெரியாம போச்சே.. இன்டர்நெட் இல்லாமல் UPI கட்டணம் செலுத்தலாமா? Google Pay, PhonePe, Paytm மக்களே கவனியுங்க!
- Finance தங்கம் விலை இன்று 1450 ரூபாய் சரிவு.. இதுதான் திரில்லிங்கான நேரம்.. தங்கத்தை இப்போ வாங்கலாமா..?
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே வேறு எந்த வீரரும் செய்யாத செஞ்சுரி சாதனை படைத்த ஜெய்ஸ்வால்
- Automobiles இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பூமிகாவின் 'ஆனந்தம் ஆயிரம்'
சில்லுன்னு ஒரு காதல் படத்துக்குப் பிறகு கல்யாணம் பண்ணிக்கொண்டு செட்டிலாகிவிட்ட பூமிகா, அதன் பிறகு நடித்த தெலுங்குப் படம் சத்யபாமா. இந்தப் படம்தான் இப்போது தமிழில் ஆனந்தம் ஆயிரமாக தயாராகிக் கொண்டிருக்கிறது. இதில் பூமிகாவுக்கு ஜோடி சிவா எனும் புதுமுகம்.
ரங்கீலா எண்டர்பிரைசஸ் சார்பில் சித்திரைச் செல்வன் மிகப் பிரமாண்டமாகத் தயாரிக்கிறார்.
இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் திரைப்படக் கல்லூரி மாணவர் நானு ஹரி. தமிழில் இவருக்கு முதல் படம் இதுதான்.
படம் குறித்து இயக்குநர் ஸ்ரீஹரி இப்படிக் கூறுகிறார்:
"சந்தோஷத்தைச் சந்தோஷமா சொல்லணும். ஆனா கஷ்டத்தை சந்தோஷமா சொல்வது கயிறு மேல் நடப்பது மாதிரி சாகஸமான வேலை. கொஞ்சம் தவறினாலும் கவுந்திடும். அந்த மாதிரி ஒரு ஸ்கிரிப்ட்தான் இந்தப் படம்.
இந்த ஸ்கிரிப்டை உருவாக்கும்போது எனக்கு என்ன உணர்வு இருந்ததோ அதே உணர்வு படம் பார்ப்பவர்களுக்கும் வரும். காதலுக்கு அந்த வலிமை உண்டு. காதலின் வலியையும் சுகத்தையும் அனுபவிக்கிற மாதிரியான காட்சிகள் இந்தப் படத்தில் நிறையவே இருக்கு.
இந்தக் கதையை நான் முதலில் தெலுங்கில்தான் பண்ணினேன். சத்யபாமா எனும் பெயரில் வெளியான இப்படத்துக்கு நல்ல வரவேற்பு. இளைஞர்கள், குடும்பஸ்தர்கள் என பேதமின்றி எல்லோரும் நூறு சதவிகிதம் ரசித்துப் பார்த்த படம் இது. வெளிநாடுகளிலும் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு.
பூமிகாவோட கேரியர்ல பெருமையா சொல்லிக்கிற படமா இது இருக்கும்னு எல்லாரும் சொன்னாங்க. அந்த அளவு கேரக்டராவே ஒன்றிப்போய் வாழ்ந்திருப்பாங்க பூமிகா.
இந்தக் கதையை எடுக்கும்போது என்ன நம்பிக்கை இருந்ததோ அதே மாதிரி படத்தின் வெற்றியும் இருந்தது. அந்தப் படம்தான் இப்போது ஆனந்தம் ஆயிரமாக தமிழுக்கும் வருகிறது. நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்..."
எப்போதுமே தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்கு நல்ல பலன் இருக்கத்தானே செய்கிறது!
-
இதனால்தான் விவாகரத்து.. அந்த நடிகையுடன் இருக்கும்போது உறுதியானது.. மனம் திறந்த தொகுப்பாளினி டிடி
-
மகளா, கௌரவமா?.. திணறிய ரஜினி?.. சி.எம் வீட்டுக்கு போகச்சொன்னாரா குருநாதர்?.. பிரபலம் இப்படி சொல்றாரே?
-
Thalaivar 171: ரோலக்ஸை விட தாறுமாறா இருக்கே.. தலைவர் 171 படத்தின் டைட்டில் இதுதானா? லோகேஷ் ட்வீட்!