கணவர் நிஷால் சந்திராவிடம் இருந்து விவாகரத்து பெற்றார் காவ்யா மாதவன்

பிரபல மலையாள் நடிகை காவ்யா மாதவன். கடந்த 1991-ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகையாக உள்ளார். மலையாளத்தில் பெரிய ஹீரோக்கள் அனைவருடனும் நடித்துள்ளார்.
காவ்யாவுக்கும் கம்யூட்டர் என்ஜினியர் நிஷால் சந்திரா என்பவருக்கும் கடந்த 2008-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது. பிப்ரவர் மாதம் காவ்யா கணவருடன் குவைத்தில் செட்டிலானார். ஆனால் சில மாதத்திலேயே பிரச்சனை ஏற்பட்டு காவ்யா ஜூன் மாதம் நாடு திரும்பினார்.
பிறகு அக்டோபர் மாதம் தம்பதிகள் இருவரும் பிரிந்துவிட முடிவு செய்து நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்தனர். இதற்கிடையே தன்னை தனது கணவரும், அவரது குடும்பத்தாரும் கொடுமைப் படுத்தியதாகவும் காவ்யா புகார் கொடுத்தார்.
இந்த விவகாரத்து வழக்கு எர்ணாகுளத்தில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று காவ்யா மாதவனுக்கு விவாகரத்து அளித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தனது கணவர் மீது கொடுத்த புகாரை காவ்யா வாபஸ் பெற்றார்.


Click it and Unblock the Notifications











