twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நித்யானந்தாவுடன் படுக்கையில் இருந்தது நானில்லை... நான் நித்தியின் பக்தை... அவருடன் உறவு தொடரும்!

    By Chakra
    |

    Ranjitha
    நித்யானந்தாவுடன் படுக்கையில் இருந்தது நானில்லை. அது ஜோடிக்கப்பட்ட பொய்யான காட்சி என்று மறுப்பு தெரிவித்துள்ளார் நடிகை ரஞ்சிதா.

    நித்யானந்தாவின் பெங்களூர் ஆசிரமத்தில், அவரது படுக்கையறையில் நடிகை ரஞ்சிதாவும் நித்யானந்தாவும் செக்ஸ் வைத்துக் கொள்வது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் காட்சியை போலீசார் பல்வேறு ரசாயண சோதனைகளுக்கு உட்படுத்தியதில், அந்தக் காட்சி எந்த ஒட்டு வேலையும் இல்லை, உண்மையானதுதான் என்று போலீசார் கர்நாடக நீதிமன்றத்தில் சாட்சி அளித்துள்ளனர்.

    இந்த நிலையில் வீடியோ வெளியாகி கிட்டத்தட்ட 8 மாதங்களுக்குப் பிறகு நடிகை ரஞ்சிதா வெளியில் வந்துள்ளார். கர்நாடக நீதிமன்றத்தில் நேற்று ஆஜரான ஆவர், இன்று பெங்களூரில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

    அவர் கூறுகையில், "நித்யானந்தாவுடன் செக்ஸ் காட்சியில் இடம்பெற்றுள்ள பெண் நானல்ல. அவை அனைத்தும் பொய்யானவை, ஜோடிக்கப்பட்டவை. நித்யானந்தாவும் நானும் செக்ஸ் வைத்துக் கொண்டதில்லை. என்னை அவ்வாறு அவர் அணுகியதில்லை.

    எனக்கு ஒன்றுமே தெரியாது. பத்திரிகைகளைப் பார்த்துதான் இத்தனை விஷயங்களையும் தெரிந்து கொண்டேன். நான் நித்யானந்தாவின் பக்தை. இந்த உறவு தொடரும்.

    நான் தலைமறைவாகவில்லை. உண்மையில் நான் மிரட்டப்பட்டேன். அதனால்தான் அமெரிக்காவுக்குப் போய்விட்டேன். 18 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறேன். இப்போதும் எனக்கு வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன", என்றார் ரஞ்சிதா.

    English summary
    Tamil actress Ranjitha on Friday denied that she was the woman in a sex romp video involving self-styled godman Nityananda Swami. "I am not the woman in the video," Ranjitha said at a press meet in Bangalore in her first public appearance after the sex scandal broke out in March.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X