Don't Miss!
- Automobiles பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
- News நடிகர் விஜய்க்கு புதிய சிக்கல்.. ஓட்டுப்போட வந்தது குத்தமா? போலீசுக்கு பறந்த பரபர புகார்.. அடபாவமே
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
தனி நாயகியாக நடிக்க வேண்டும் - சுஜாவின் தீராத ஆசை
ஐட்டம் பாடல்களின் அசைக்க முடியாத ராணியாக வலம் வரும் சுஜா, ஆரம்பத்தில் ஹீரோயினாகத்தான் அறிமுகமானார். பிளஸ்டூ படத்தில் நாயகியாக நடித்த அவருக்கு, அதன் பின்னர் வந்தது என்னவோ குத்துப் பாட்டுகள்தான்.
அவரும் கொஞ்சம் கூட யோசிக்காமல் வந்த குத்துப் பாட்டுக்களையெல்லாம் ஏற்றுக் கொண்டார். இதனால் பீல்டவுட் ஆகாமல் தொடர்ந்து திரையுலகில் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இப்போது இரட்டை நாயகியரில் ஒருவராக நடித்துக் கொண்டிருக்கிறார் சுஜா. எங்கள் ஆசான் படத்தில் விக்ராந்த்துக்கு ஜோடியாக நடித்தார். தற்போது மிளகா படத்திலும் இரு நாயகியர்களில் ஒருவராக வருகிறாராம்.
இனிமேல் குத்துப் பாட்டுக்கு நான் ஆடப் போவதில்லை. இப்போது 2 நாயகியர்களில் ஒருவராக நடித்து வருகிறேன். விரைவில் மீண்டும் தனி நாயகியாக தனி ஆவர்த்தம் செய்யத்தான் போகிறேன் என்கிறார் நம்பிக்கையுடன்.
சமீபத்தில் வெளியான ஐந்தாம்படை படத்தில் ஆடிய குத்துப்பாட்டுதான் தனது கடைசி குத்துப்பாட்டாம். இனிமேல் ஐட்டம் ஆட்டம் ஆட மாட்டாராம் சுஜா.