Don't Miss!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தனி நாயகியாக நடிக்க வேண்டும் - சுஜாவின் தீராத ஆசை
ஐட்டம் பாடல்களின் அசைக்க முடியாத ராணியாக வலம் வரும் சுஜா, ஆரம்பத்தில் ஹீரோயினாகத்தான் அறிமுகமானார். பிளஸ்டூ படத்தில் நாயகியாக நடித்த அவருக்கு, அதன் பின்னர் வந்தது என்னவோ குத்துப் பாட்டுகள்தான்.
அவரும் கொஞ்சம் கூட யோசிக்காமல் வந்த குத்துப் பாட்டுக்களையெல்லாம் ஏற்றுக் கொண்டார். இதனால் பீல்டவுட் ஆகாமல் தொடர்ந்து திரையுலகில் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இப்போது இரட்டை நாயகியரில் ஒருவராக நடித்துக் கொண்டிருக்கிறார் சுஜா. எங்கள் ஆசான் படத்தில் விக்ராந்த்துக்கு ஜோடியாக நடித்தார். தற்போது மிளகா படத்திலும் இரு நாயகியர்களில் ஒருவராக வருகிறாராம்.
இனிமேல் குத்துப் பாட்டுக்கு நான் ஆடப் போவதில்லை. இப்போது 2 நாயகியர்களில் ஒருவராக நடித்து வருகிறேன். விரைவில் மீண்டும் தனி நாயகியாக தனி ஆவர்த்தம் செய்யத்தான் போகிறேன் என்கிறார் நம்பிக்கையுடன்.
சமீபத்தில் வெளியான ஐந்தாம்படை படத்தில் ஆடிய குத்துப்பாட்டுதான் தனது கடைசி குத்துப்பாட்டாம். இனிமேல் ஐட்டம் ஆட்டம் ஆட மாட்டாராம் சுஜா.