Don't Miss!
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Sports அஸ்வின் நீங்க செஞ்சது பெரிய தப்பு.. உங்க தவறை மறைக்க ஜெய்ஸ்வாலை திட்டுவதா? என்ன நடந்தது?
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இயக்குனர் மீது நடிகை உதயதாரா பரபரப்பு புகார்
கேரள மாநிலம் கோட்டையத்தைச் சேர்ந்த உதயதாரா, தீ.நகர் படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். அடுத்து கண்ணும் கண்ணும் படத்திலும் நடித்தார்.
முதல் படமான தீ.நகர் படத்தில் நடித்தபோது அப்படத்தின் டைரக்டர் திருமலைக்கும் உதயதாராவுக்கும் காதல் ஏற்பட்டதாக கிசு கிசு பரவியது. டைரக்டருடன் மிகவும் நெருக்கம் காட்டியதாகக் கூறப்பட்டது.
இந் நிலையில் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக கோலிவுட்டில் கிசுகிசு கிளம்பியது.
ஆனால், இதை திட்டவட்டமாக மறுத்துள்ளார் உதயதாரா. சென்னை தி.நகரில் ஒரு கெஸ்ட் ஹவுசில் தங்கியுள்ள அவர் நம் நிருபரிடம் அவர் கூறுகையில்,
தீ.நகர் படத்தில் நடித்த போதே என்னை காதலிப்பதாக சொன்னார் திருமலை. அதை நான் ஏற்கவில்லை. இதையடுத்து விடாமல் அடிக்கடி என்னுடன் செல்போனில் பேசி தொல்லை தந்தார்.
பள்ளியில் படிக்கும் என்னை சின்னப்பெண் என்றும் பாராமல் தொடர்ந்து திருமணத்துக்கு சம்மதிக்குமாறு தொல்லை கொடுத்தார், கட்டாயப்படுத்தினார்.
நிறயை படங்களில் நடித்து பெயர் வாங்க வேண்டும் காதல், கல்யாணத்திலெல்லாம் இப்போது எனக்கு விருப்பமில்லை என்று அவரிடம் கூறிவிட்டேன். ஆனாலும் திரும்ப திரும்ப தொந்தரவு செய்தார். திருப்பதிக்கு ஓடிப் போய் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறினார்.
நான் காதலை ஏற்காததால் இருவரும் காதலிப்பதாக அவரே கிசுகிசு பரப்பி விட்டார். திருமணம் ஆகிவிட்டதாகவும் அடுத்து புரளியைக் கிளப்பினார். இப்போது நான் கர்ப்பமாக உள்ளதாக ஒரு பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
இது கொடுமை. இதனால் நான் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்.
எனக்கு 19 வயது தான் ஆகிறது. இப்போது தான் என் சினிமா வாழ்க்கையே தொடங்கியுள்ளது. நான் அவரை எனது சகோதரர் போலத்தான் நினைத்தேன். இப்போதும் கூட அவரை நான் நண்பராகவே கருதினேன். ஆனால், அதையெல்லாம் திருமலை கெடுத்துவிட்டார். நண்பராக இருக்கக் கூட அவருக்கு அருகதை இல்லை.
அவர் தொல்லை கொடுப்பது என் பெற்றோருக்கு தெரியும். இனிமேல் அமைதியாக இருக்க மாட்டேன். பெற்றோருடன் சென்று போலீசில் திருமலை மீது புகார் செய்வேன் என்றார் உதயதாரா.
ஆனால், இதையெல்லாம் திருமலை திட்டவட்டமாக மறுத்துள்ளார். உதயதாராவிடம் நட்பாக பழகியதாகவும், அவரை காதலிக்கவே இல்லை என்றும் கூறியுள்ள அவர் உதயதாரா குறித்து வெளியாகும் செய்திகளுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. தேவையானால் அவரை நேரில் சந்தித்து விளக்கம் தரவும் நான் தயார் என்று கூறியுள்ளார்.
-
என்னது விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது இவரா?.. தரமான சம்பவமா இருக்குமோ?.. அப்போ அவங்க நிலைமை
-
அட GOAT படத்தில் அந்த விஷயமும் இருக்கா..ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் இருக்கோ.. வெளியான லேட்டஸ்ட் தகவல்
-
யங் லுக்கில் மாஸ் காட்டுறாரே கவின்.. ஸ்டார் படத்தின் டப்பிங் ஓவர்.. சீக்கிரமே பிளாக்பஸ்டர் ரெடி!