வீணா மாலிக்கின் நிர்வாண போஸ்- தந்தை அதிர்ச்சி- மகளுக்குக் கண்டனம்
தனது மகளின் செயல் மன்னிக்கவே முடியாத குற்றம் என்றும் அவர் சாடியுள்ளார். பாகிஸ்தானுக்குப் பெருத்த அவமானத்தை வீணா மாலிக் தேடிக் கொடுத்து விட்டார் என்றும் அவர் வருத்தப்பட்டுள்ளார். மேலும் வீணா மாலிக் மீது பாகிஸ்தான் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எப்எச்எம் பத்திரிக்கைக்கு வீணா கொடுத்துள்ள ஆபாச போஸானது மிகவும் கண்டனத்துக்குரியது. அவரது செயலால் நான் கடும் கோபமடைந்துள்ளேன். மனம் உடைந்து போயுள்ளேன். நாட்டுக்கு கெட்ட பெயரைத் தேடிக் கொடுத்து விட்டார் வீணா. அவர் மீது பாகிஸ்தான் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
இதற்கிடையே, இந்தப் படம் உண்மையானதா, அல்லது போலியானதா என்பது குறித்து விசாரிக்கப்படும் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் தெரிவித்துள்ளார்.
முன்னதாக எப்எச்எம் இந்தியா இதழின் அட்டைப் படத்திற்காக முழு நீள நிர்வாண கோலத்தில் வீணா மாலிக் போஸ் கொடுத்திருந்தார். மேலும் தனது இடது கையின் தோள்பட்டையில் ஐஎஸ்ஐ என்று பாகிஸ்தான் உளவு அமைப்பின் பெயரையும் பச்சை குத்தியிருந்தார். இதனால் இந்தியாவிலும் வீணாவுக்கு எதிராக குரல்கள் கிளம்பின.


Click it and Unblock the Notifications












