Don't Miss!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Sports DC vs GT : டாப் ஆர்டரில் அசத்திய அக்சர் படேல்.. ஜடேஜாவை பொளக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- News உடல் பருமன் அறுவை சிகிச்சையால் இறந்த மகன்.. முதல்வர் ஸ்டாலினுக்கு தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கற்பழிப்பு-விபச்சாரம்-சமீரா 'ஹாட்'!
வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழுக்கு வந்த சமீரா ரெட்டி, தொடர்ந்து அசல் படத்தில் தலை காட்டினார். அது சமீராவுக்கு பெரிய திருப்தியைத் தரவில்லை. ஆனால் தற்போது கெளதம் மேனனுடன் மீண்டும் இணைந்து இயங்கி வரும் சமீரா, நடுநிசி நாய்கள் படத்தில் பழைய கதாபாத்திரம் ஒன்றை சற்று வித்தியாசமாக செய்து வருகிறாராம்.
நடுநிசி நாய்கள் படத்தில் சமீராவுக்கு விலைமாது கேரக்டராம். திரில்லர் படமான இதில் சமீராவுக்கான பவர்ஃபுல் கேரக்டராம்.
இது இப்படி என்றால் நக்சலைட் வேடத்தில் சமீரா நடிக்கும் ரெட் அலர்ட் படத்தில் அதிர்ச்சிகரமான கற்பழிப்பு வேடத்தில் நடித்துள்ளாராம் சமீரா. இந்தக் காட்சியில் நடிக்கும்போது மிகவும் கஷ்டமாக உணர்ந்தாராம். படப்பிடிப்பு முடிந்த பிறகும் கூட சோகத்திலிருந்து அவர் விடுபடவில்லையாம்.
போலீஸ் நிலைய கழிப்பறையில் வைத்து போலீஸார் சமீராவை கற்பழிப்பதாக காட்சியாம். இந்த சம்பவத்திற்குப் பின்னர்தான் அவர் நக்சலைட்டாக மாறுகிறாராம். படத்தின் கதையும், தனது பாத்திரமும் நிறைய பாதித்து விட்டதாக கூறும் சமீரா, இதுவரை நான் நடித்த படங்களிலேயே இதுதான் என்னை மிகவும் பாதித்தது என்கிறார் நெகிழ்ச்சியுடன்.