நான் சுத்தமான தமிழ்ப் பெண்-கூறுகிறார் ஃபிரன்ட்ஸ் விஜயலட்சுமி

கன்னடத்தில் ஒரு காலத்தில் பிசியாக இருந்தவர் விஜயலட்சுமி. பின்னர் தமிழில் ஃபிரன்ட்ஸ் படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் சில படங்களில் நடித்தார். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு திடீரென எந்த மொழிப் படத்திலும் நடிக்கவில்லை.
இடையில் டிவி சீரியல் ஒன்றில் நடித்தார். பிறகு டிவி ரியாலிட்டி ஷோ ஒன்றை தொகுத்து அளித்தார். அப்போது சில சர்ச்சைகள் எழவே அதிலிருந்தும் மாயமானார். இந்தநிலையில் மீண்டும் டிவி ரியாலிட்டி ஷோ மூலம் திரம்பி வந்துள்ளார் விஜயலட்சுமி.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் கர்நாடகத்தில் பிறந்து வளர்ந்தவர் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் நான் ஒரு சுத்தமான தமிழ்ப பெண்தான். சென்னையில்தான் பிறந்தேன். கர்நாடகத்தில் படித்தேன். அங்கு பட வாய்ப்புகள் வரவே அங்குசில காலம் செட்டிலாகி விட்டேன். ஆனாலும் எனது இதயம் தமிழுக்காகவே துடித்துக் கொண்டிருந்தது.
இப்போது கடந்த ஐந்து வருடங்களாக நான் சென்னையில்தான் வசித்து வருகிறேன். இங்கேயே செட்டிலாகப் போகிறேன் என்றார்.
சரி உங்களுக்கு கல்யாணமாகி விட்டதாமே என்று கேட்டால், பளபளவென வாய் விட்டுச் சிரித்தார் விஜயலட்சுமி. நான் நீண்ட காலமாக கோலிவுட்டில் இல்லாததால் பலரும் நான் கல்யாணமாகி செட்டிலாகி விட்டதாக கூறத் தொடங்கி விட்டனர். உண்மையில் நான் இன்னும் சிங்கிள்தான். தொடர்ந்து நடிக்க காத்திருக்கிறேன், நடித்துக் கொண்டும் இருக்கிறேன் என்கிறார் விஜயலட்சுமி.


Click it and Unblock the Notifications











