Don't Miss!
- Sports SRH vs RCB: இந்த தங்கத்த தூக்குங்க.. ஆர்சிபியை அலறவிட்ட தமிழக வீரர்.. நடராஜனால் மிரண்ட கம்மின்ஸ்!
- News தமிழகத்தில் உச்சம் தொடும் கோடை வெப்பம்.. திடீரென முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.. என்ன மேட்டர்
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
திருப்பதியில் சில்மிஷம்... ரசிகர்களை கன்னத்தில் அறைந்த சமந்தா!
மாஸ்கோவின் காவிரி. விண்ணைத்தாண்டி வருவாயா படங்களில் நடித்துள்ளவர் சமந்தா. முரளி மகன் அதர்வா கதா நாயகனான பாணா காத்தாடி படத்திலும் ஜோடியாக நடித்தார். தெலுங்கில் முன்னணி நடிகை இவர்.
சமந்தாவை திருப்பதியில் ஒரு கடையை திறந்து வைக்க நேற்று அழைத்து இருந்தனர். அவரை காண அங்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டு நின்றனர். சமந்தா காரில் இருந்து இறங்கியதும் கூட்டத்தினர் சுற்றி வளைத்தனர். ரசிகர்கள் மத்தியில் அவர் சிக்கிக் கொண்டார்.
இடுப்பை கிள்ளி அவர்கள் சில்மிஷம் செய்தனர். கைகளைப் பிடித்து இழுத்தனர். அவர்களிடம் இருந்து தப்ப முடியாமல் சமந்தா அலறினார். போலீசார் ஒரு சிலரே நின்றதால் சமந்தாவை மீட்க முடியவில்லை. அதிக தொந்தரவு செய்த 3 ரசிகர்களை கன்னத்தில் மாறி மாறி அறைந்தார் சமந்தா.
நிலைமை மோசமாவதை உணர்ந்த விழாக் குழுவினர் கடை ஊழியர்களை அனுப்பி வைத்து சமந்தாவை ரசிகர்கள் பிடியில் இருந்து மீட்டனர்.
இதுபற்றி சமந்தா கூறுகையில், "ரசிகர்கள் நடத்தை வேதனையைத் தருவதாக உள்ளது. நாங்களும் மனிதர்கள்தான். இதைப் புரிந்து கொள்ள வேண்டும். கடையை திறந்து விட்டு திருப்பதி கோவிலுக்கு போய் ஏழுமலையானை தரிசிக்க திட்டமிட்டிருந்தேன். மனவேதனையால் கோவிலுக்கு போகமலேயே திரும்பிச் செல்கிறேன்," என்றார்.