Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
செக் மோசடி... சரண்யா மோகனுக்கு மலையாளத்தில் தடை!
யாரடி நீ மோகினி, வெண்ணிலா கபடி குழு, பஞ்சாமிர்தம், ஈரம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சரண்யா மோகன். மலையாளத்திலும் முன்னணி நடிகையாக உள்ளார்.
தற்போது அழகர்சாமியின் குதிரை என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து விரைவில் திரைக்கு வர உள்ளது.
இதற்கிடையில் சரண்யா மோகன் மீது மலையாள தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மலையாள பட உலகை சேர்ந்த ஒருவருக்கு சரண்யா மோகன் குறிப்பிட்ட தொகைக்கு செக் கொடுத்து இருந்தாராம். அதை பாங்கியில் போட்ட போது பணம் கொடுக்க வேண்டாம் என பாங்கியில் சொல்லி ஸ்டாப் பேமண்ட் கொடுத்து நிறுத்திவிட்டாராம்.
இதனால் ஆத்திரமான அவர், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்து அதன் மூலம் நடிக்கத் தடை விதிக்கப்பட்டது என்கின்றனர். தற்போது சமரச பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. தடை நீக்கப்பட்டு விடும் என கூறப்படுகிறது.