'ஷேவ்' செஞ்சா மோடி பார்க்க சூப்பரா இருப்பார்.. 'ஜொள்கிறார்' சித்ராங்கதா சிங்!
பெங்களூர்: பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நீட்டாக ஷேவ் செய்து தாடியை எடுத்து விட்டால் பார்க்க பிரமாதமாக இருப்பார் என்று கூறியுள்ளார் நடிகை சித்ராங்கதா சிங்.
பெங்களூரில் ஜில்லெட் நிறுவனம் சார்பில் நடந்த ஷேவிங் குறித்த நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டார் சித்ராங்கதா. அப்போதுதான் இப்படி ஒரு கருத்தை வெளியிட்டார் அவர்.

நிகழ்ச்சியின்போது சித்ராங்கதா பேசுகையில், தனது தாடியை எடுப்பது குறித்து நரேந்திர மோடி சிந்திக்க வேண்டும். அவரது முக அழகுக்கு தாடி பெரும் இடையூறாக இருப்பதாக நான் கருதுகிறேன்.
சுத்தமாக ஷேவ் செய்து பளிச்சென அவர் மாறினால் பார்க்க பிரமாதமாக இருப்பார். அழகாக இருப்பார். இப்போது இருப்பதை விட அவரது முகம் இன்னும் வசீகரமாக இருக்கும் என்றார் சித்ராங்கதா.
மேலும் அவர் கூறுகையில், தினசரி ஷேவ் செய்தாலே ஆண்களே முகம் பளிச்சென திருத்தமாக இருக்கும் என்றார்.
ரஜினிக்கு தாடி ஓ.கே.வாம்...!
சரி தாடி வைத்த ஆண்களில் யாரை உங்களுக்குப் பிடிக்கும் என்ற கேள்விக்கு, ரஜினிகாந்த்தான். அவர் எப்படி இருந்தாலும் அழகாக இருக்கும் என்றார் சிரித்தபடி.


Click it and Unblock the Notifications











