Don't Miss!
- News விண்ணைத் தொடும் உச்சம்! சென்னையில் ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை ரூ51,000-த்தை தாண்டியது!
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- Finance அதானி உடன் கைகோர்த்த அம்பானி.. வரலாற்று சம்பவம், இனி என்னவெல்லாம் நடக்குமோ..?
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
'ஷேவ்' செஞ்சா மோடி பார்க்க சூப்பரா இருப்பார்.. 'ஜொள்கிறார்' சித்ராங்கதா சிங்!
பெங்களூர்: பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நீட்டாக ஷேவ் செய்து தாடியை எடுத்து விட்டால் பார்க்க பிரமாதமாக இருப்பார் என்று கூறியுள்ளார் நடிகை சித்ராங்கதா சிங்.
பெங்களூரில் ஜில்லெட் நிறுவனம் சார்பில் நடந்த ஷேவிங் குறித்த நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டார் சித்ராங்கதா. அப்போதுதான் இப்படி ஒரு கருத்தை வெளியிட்டார் அவர்.
நிகழ்ச்சியின்போது சித்ராங்கதா பேசுகையில், தனது தாடியை எடுப்பது குறித்து நரேந்திர மோடி சிந்திக்க வேண்டும். அவரது முக அழகுக்கு தாடி பெரும் இடையூறாக இருப்பதாக நான் கருதுகிறேன்.
சுத்தமாக ஷேவ் செய்து பளிச்சென அவர் மாறினால் பார்க்க பிரமாதமாக இருப்பார். அழகாக இருப்பார். இப்போது இருப்பதை விட அவரது முகம் இன்னும் வசீகரமாக இருக்கும் என்றார் சித்ராங்கதா.
மேலும் அவர் கூறுகையில், தினசரி ஷேவ் செய்தாலே ஆண்களே முகம் பளிச்சென திருத்தமாக இருக்கும் என்றார்.
ரஜினிக்கு தாடி ஓ.கே.வாம்...!
சரி தாடி வைத்த ஆண்களில் யாரை உங்களுக்குப் பிடிக்கும் என்ற கேள்விக்கு, ரஜினிகாந்த்தான். அவர் எப்படி இருந்தாலும் அழகாக இருக்கும் என்றார் சிரித்தபடி.