சானியாவில் பாதி... நயன்தாராவில் பாதி... இதோ சானியாதாரா!

இந்தப் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறவர் காமடெி நடிகர் ஜெயமணியின் மகன் வர்ஷன். இயக்குநர் சுந்தர் சியிடம் பணியாற்றிய திலகராஜன் என்பவர் இந்தப் படத்தை இயக்குகிறார்.
இதெல்லாம் ஒரு பக்கமிருக்கட்டும். படத்தின் நாயகியுடைய பெயர்தான் சுவாரஸ்யமானது.
நடிகை மலையாள தேசத்து வரவுதான். எனவே அவர் பெயரில் ஏதோ ஒரு நாயர் ஒட்டிக் கொண்டிருந்தது.
பார்த்தார்கள்... புதுப்பெயருக்காக ரொம்ப நேரமாக யோசித்தவர்களுக்கு ஒரு பளிச் ஐடியா மின்னியது. அதுதான் 'சானியாதாரா'.
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பெயரிலிருந்து சானியாவையும், நயன்தாரா பெயரிலிருந்து தாராவையும் உருவி.. சானியாதாரா என்று நாமகரணம் சூட்டிவிட்டார்.
ஹீரோயின் என்னமோ பார்க்க சுமாராக இருந்தாலும் பெயர் சூப்பரா இருக்கே என்று பாராட்டுகிறார்களாம்!
எப்படி இந்தப் பெயரை வைத்துக் கொண்டீர்கள் என யாரோ கேட்டதற்கு... நாயகி சொன்ன பதில்: 'நான் நயன்தாரா, சானியா மிர்சாவுக்கு பெரிய விசிறி. அதான் அப்படி பேர் வச்சிக்கிட்டேன்'.
எப்பூடி!


Click it and Unblock the Notifications











