Don't Miss!
- News தமிழ்நாட்டில் நாளை வாக்குப் பதிவு... இப்படியும் 20 கட்சிகள் களத்தில் இருப்பது தெரியுமா?
- Automobiles ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி
- Finance கூகுள் சுந்தர் பிச்சை எச்சரிக்கை.. கொத்து கொத்தா ஊழியர்கள் மீண்டும் பணிநீக்கம்..!
- Technology நிலவை நோக்கி மீண்டும்-மீண்டும் படையெடுக்கும் ISRO.. முதல் இந்தியன் நிலவில் கால் பதிக்கும் வரை ஓயாது..
- Lifestyle குரு பெயர்ச்சி 2024: மே 01 முதல் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்... உங்க ராசி இதுல இருக்கா?
- Sports T20 WC 2024: நானும், கோலியும் தொடக்க வீரர்களா? யாரு இப்படி சொல்றாங்க.. ரோகித் சர்மா ஓபன் டாக்!
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
பாம்பென்றால் படையே நடுங்கும் போது... ஆனந்தி மட்டும் அலறாமல் அல்வாவா சாப்பிடுவார்..!
தஞ்சாவூர்: சண்டி வீரன் படப்பிடிப்பின் போது நடிகை ஆனந்தி, பாம்புகள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த படப்பிடிப்பில் பயம் கலந்த பீதியுடன் நடித்தாராம்.
‘பொறியாளன்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ஆனந்தி. அதனைத் தொடர்ந்து, பிரபு சாலமனின் ‘கயல்' படம் மூலம் ஆனந்தி திறமையான நடிகைகள் பட்டியலில் இணைந்தார்.
இவர் தற்போது சண்டி வீரன், திரிஷா இல்லன்னா நயன்தாரா என இரண்டு தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.
2 படங்கள்....
‘சண்டி வீரன்' படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாகவும், 'திரிஷா இல்லன்னா நயன்தாரா' படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாகவும் கயல் நடித்துக் கொண்டிருக்கிறார்.
சண்டி வீரன்...
இதில் சற்குணம் இயக்கி வரும் ‘சண்டி வீரன்' படப்பிடிப்பு சமீபத்தில் தஞ்சாவூரிலுள்ள ஏரி ஒன்றில் நடந்திருக்கிறது.
பக்கத்தில் பாம்பு...
அப்போது மான்டேஜ் பாடலுக்கான இந்த படப்பிடிப்பின் போது ஆனந்திக்கு மிக அருகில் பாம்பு ஒன்று நின்று கொண்டிருந்ததாம். முதலில் இதை கவனிக்காத ஆனந்தி தைரியமாகத் தான் நடித்துக் கொண்டிருந்திருக்கிறார்.
பதறிப் போன ஆனந்தி...
எதேச்சையாக தனக்கு அருகில் பாம்பு இருப்பதைக் கண்டு பதறி விட்டாராம் ஆனந்தி. அந்த இடத்தைவிட்டு அலறி அடித்துக் கொண்டு ஓடியிருக்கிறார்.
ஏரியில இதெல்லாம் சகஜமப்பா...
பிறகு அந்த ஏரிக்கு அருகே பாம்பு நடமாட்டம் எல்லாம் சகஜம் என படப்பிடிப்புக் குழுவினர் தைரியம் கொடுத்து, மீதிக் காட்சிகளில் ஆனந்தியை நடிக்க வைத்துள்ளனர்.
பாம்பென்றால் படையே நடுங்கும் போது, ஆனந்தி மட்டும் அலறாமல் அல்வாவா சாப்பிடுவார்..!