Don't Miss!
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- News ஆந்திரா தேர்தல்: சிஎம் ஜெகன் அண்ணாவை அலறவிடும் இன்னொரு தங்கை! காங்கிரஸ் ஷர்மிளாவுடன் கை கோர்த்தார்!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
பாம்பென்றால் படையே நடுங்கும் போது... ஆனந்தி மட்டும் அலறாமல் அல்வாவா சாப்பிடுவார்..!
தஞ்சாவூர்: சண்டி வீரன் படப்பிடிப்பின் போது நடிகை ஆனந்தி, பாம்புகள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த படப்பிடிப்பில் பயம் கலந்த பீதியுடன் நடித்தாராம்.
‘பொறியாளன்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ஆனந்தி. அதனைத் தொடர்ந்து, பிரபு சாலமனின் ‘கயல்' படம் மூலம் ஆனந்தி திறமையான நடிகைகள் பட்டியலில் இணைந்தார்.
இவர் தற்போது சண்டி வீரன், திரிஷா இல்லன்னா நயன்தாரா என இரண்டு தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.
2 படங்கள்....
‘சண்டி வீரன்' படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாகவும், 'திரிஷா இல்லன்னா நயன்தாரா' படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாகவும் கயல் நடித்துக் கொண்டிருக்கிறார்.
சண்டி வீரன்...
இதில் சற்குணம் இயக்கி வரும் ‘சண்டி வீரன்' படப்பிடிப்பு சமீபத்தில் தஞ்சாவூரிலுள்ள ஏரி ஒன்றில் நடந்திருக்கிறது.
பக்கத்தில் பாம்பு...
அப்போது மான்டேஜ் பாடலுக்கான இந்த படப்பிடிப்பின் போது ஆனந்திக்கு மிக அருகில் பாம்பு ஒன்று நின்று கொண்டிருந்ததாம். முதலில் இதை கவனிக்காத ஆனந்தி தைரியமாகத் தான் நடித்துக் கொண்டிருந்திருக்கிறார்.
பதறிப் போன ஆனந்தி...
எதேச்சையாக தனக்கு அருகில் பாம்பு இருப்பதைக் கண்டு பதறி விட்டாராம் ஆனந்தி. அந்த இடத்தைவிட்டு அலறி அடித்துக் கொண்டு ஓடியிருக்கிறார்.
ஏரியில இதெல்லாம் சகஜமப்பா...
பிறகு அந்த ஏரிக்கு அருகே பாம்பு நடமாட்டம் எல்லாம் சகஜம் என படப்பிடிப்புக் குழுவினர் தைரியம் கொடுத்து, மீதிக் காட்சிகளில் ஆனந்தியை நடிக்க வைத்துள்ளனர்.
பாம்பென்றால் படையே நடுங்கும் போது, ஆனந்தி மட்டும் அலறாமல் அல்வாவா சாப்பிடுவார்..!