Don't Miss!
- News மாமியாரை ஒரே எத்து.. அலேக்கா "தூக்கி" குப்பை தொட்டியில் போட்டாச்சு.. அந்த மகராசியின் பெயர் "லட்சுமி"
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
திரிஷா கொஞ்சம் சிம்ரன் கொஞ்சம் இரண்டும் சேர்ந்த கலவை தான் பிரியா பவானி சங்கர்! இயக்குநர் புகழாரம்!
சென்னை: நடிகை பிரியா பவானி சங்கர் நடிகைகள் திரிஷா, சிம்ரன் ஆகியோர் கலந்த கலவை என இயக்குநர் எஸ்ஜே சூர்யா தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் தனது முதல் இரண்டு படங்களை உச்ச நட்சத்திரங்களை வைத்து இயக்கியவர் தான் எஸ்.ஜே.சூர்யா. இருக்கு ஆனா இல்ல என்ற ஒற்றை வரி வசனத்தில் தமிழ் திரையுலகையே கலக்கியவர்.
தற்போது பல படங்களில் நடித்து வரும் இவர் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த சிம்ரன் மற்றும் திரிஷாவை போல தற்போது ஒரு ஹீரோயின் உள்ளார் என்று கூறியுள்ளார்.
தனது முதல் திரைப்படத்திலே அஜித்தை இயக்கி அந்த படத்தை வெற்றி பெற செய்த உடன், இவரை தமிழ் சினிமா அடையாளம் கண்டு கொண்டது, இரண்டாவது படமாக விஜய்யை வைத்து ஒரு காதல் திரைப்படம் எடுத்தார் அதுவும் ஹிட் ஆக முன்னணி இயக்குனர் ஆனார் எஸ்.ஜே.சூர்யா.
பாலிவுட் கவர்ச்சி கன்னி...கத்ரினா கைஃப்...லேட்டஸ்ட் போட்டோஸ் !
பின் இவரது படமான நீயூ பல சர்ச்சையில் சிக்கி ஒரு வழியாக வெளியானது. இதன் பின் வரிசையாக படங்களை இயக்கினார். வேறு இயக்குனர் படங்களிலும் நடித்தார். பத்து வருடங்கள் கழித்து இசை என்ற படத்தை இயக்கி,தயாரித்து,நடித்து மற்றும் அப்படத்திற்கு இசையும் அமைத்து படத்தை வெளியிட்டார் இப்படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்தது.
இதன் பின் நடிப்பில் வேறு ஒரு பரிமாணத்தை தொட்ட அவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் மகேஷ் பாபுவிற்கு வில்லனாக நடித்தார். இவ்விரண்டு படங்களும் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.
தனது யதார்த்தமான நடிப்பால் கடந்த வருடம் பல சிறுவர்களை மான்ஸ்டர் என்ற படம் முலம் அனைவரையும் கவர்ந்தார் எஸ்.ஜே.சூர்யா. தற்போது அப்படத்தில் நடித்த பிரியா பவானி சங்கர் உடன் பொம்மை என்ற படத்தில் நடித்து வருகிறார் எஸ்.ஜே.சூர்யா.இப்படத்தை இயக்குனர் ராதா மோகன் இயக்கி வருகிறார்.
இப்படத்தின் ஒரு புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த எஸ்.ஜே.சூர்யா இது பிரியா பவானி சங்கர் அல்ல நடிகை சிம்ரன் கொஞ்சம் நடிகை திரிஷா கொஞ்சம் என்று பதிவிட்டுள்ளார்.