Don't Miss!
- Technology நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் டா.. ChatGPT-க்கு செக் வச்ச Google.. இனி மொபைல் யூசர்கள் Gemini பக்கம்!
- News மயிலாடுதுறையில் ஆச்சரியம்.. அந்த "வைக்கோல் மூட்டை".. ஆஹா, வைத்தீஸ்வரன் கோயில் தையல் நாயகி.. பரவசம்
- Automobiles கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இதே வேலையா போச்சு... தீபிகா நடித்த கதையில் இன்னொரு படம்..!
சென்னை: சப்பாக் படத்தை அடுத்து, ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணைப் பற்றிய மேலும் ஒரு படமும் உருவாகியுள்ளது.
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட டெல்லியை சேர்ந்த லக்ஷ்மி அகர்வால் என்ற பெண்ணின் வாழ்க்கைக் கதை, சப்பாக் என்ற பெயரில் இந்தியில் சினிமாவாகிறது. ஆசிட் வீச்சில் பாதிக்கப் பட்டப் பெண்ணாக, தீபிகா படுகோன் நடிக்கிறார். அவருடன் விக்ராந்த் மாஸ்சே நடிக்கிறார். மேக்னா குல்சார் இயக்குகிறார்.
தீபிகா படுகோன் மற்றும் மேக்னாவுடன் இணைந்து ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
இதன் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் பேசிய தீபிகா, நான் நடித்த படங்களிலிலேயே கடினமாக இருந்த படம் இதுதான் என்று கண்ணீர் விட்டு அழுதார். இந்தப் படம் ஜனவரில் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இதற்கிடையே, ஆசிட் தாக்குதல் சம்பவத்தை மையமாக வைத்து மற்றொரு படமும் உருவாகியுள்ளது. 'ஆசிட்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை பிரியங்கா சிங் என்பவர் இயக்கி, தயாரித்துள்ளார்.
அவர் கூறும்போது, 'எங்கள் கதையும் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கதைதான். ஆனால், தீபிகாவின் படத்தில் இருந்து எங்கள் கதை வேறாக இருக்கும். இது உத்தர பிரதேசத்தில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம்.
இதைலாம் செய்வோம்ல... அசிஸ்டென்ட் டைரக்டர் ஆன பிரகாஷ் ராஜ்
தனது உறவினரால் ஆசிட் வீச்சுக்குள்ளான பெண்ணனின் கதை. அவர் யார் என்பதை இப்போதைக்குச் சொல்ல இயலாது. தீபிகாவின் சப்பாக் படத்துக்கு அதிக கவனம் கிடைத்துள்ளது என்பது உண்மைதான்' என்றார்.
ஆசிட் படத்தின் இணைத் தயாரிப்பாளர் மன்சிங் கூறும்போது, 'நாங்கள் 2017 ஆம் ஆண்டு இதன் ஷூட்டிங்கை தொடங்கினோம். அப்போது இதே கதையில் இன்னொரு படம் உருவாவது தெரியாது' என்றார்.
பிரியங்கா சிங், இல்லை என்று சொன்னாலும் இது ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லக்ஷ்மி அகர்வாலின் கதைதான் என்று கூறப்படுகிறது. இந்தப் படம், சப்பாக் படத்துக்கு முன்பே ரிலீஸ் ஆகிறது.
பாலகோட் தாக்குதலை மையமாக வைத்து, இந்தியில் இரண்டு படங்கள் உருவாகின்றனர். தமிழில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதை தலைவி என்ற பெயரிலும், அயர்ன் லேடி என்ற பெயரிலும் உருவாகிறது. குயின் என்ற வெப் சீரிஸும் இருக்கிறது.
இப்போது இந்தக் கதையிலும் இரண்டு படம் உருவாகிறது. போங்கப்பா, இதே வேலையா போச்சு என்கிறார்கள் ரசிகர்கள்.