Don't Miss!
- News பிரமாண பத்திரம் தாமதாக பதிவேற்றம்? தேனி தொகுதி வேட்பாளர் டிடிவி தினகரனின் வேட்பு மனு நிறுத்திவைப்பு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Finance மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் பங்கேற்கும் சவுதி அரேபியா.. வரலாற்று சம்பவம் பாஸ்..!!
- Sports SRH vs MI : அந்த ஜாம்பவானிடம் பேசினேன்.. என் நம்பிக்கைக்கு அதுவே காரணம்.. அபிஷேக் சர்மா பேட்டி!
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
'ப்ளீஸ், எனக்காக பிரார்த்தியுங்கள்..' மங்காத்தா பட நடிகைக்கு கொரோனா.. தனிமைப்படுத்தப்பட்டார்!
மும்பை: அஜித்தின் மங்காத்தா படத்தில் நடித்த நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. உலகம் முழுவதும் மிரட்டும் இந்த கொரோனா இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது.
கடந்த சில நாட்களாக இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் இதைக் கட்டுப்படுத்த கடுமையாகப் போராடி வருகின்றன.
தொடர்ந்து மிரட்டும் கொரோனா.. பிரபல நடிகர் அனுபம் கெர் குடும்பத்தில் 4 பேருக்கு தொற்று உறுதி!
சினிமா பிரபலங்கள்
இந்த தொற்றுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், இந்த வைரஸ் தொடர்ந்து அதிகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிர மாநிலமான மும்பையில், இந்தத் தொற்றின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அங்கு அதிகமானவர்களுக்கு இந்த தொற்று பரவியுள்ளது. சினிமா பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை.
பங்களாவுக்கு சீல்
பிரபல நடிகை ரேகா வீட்டு செக்யூரிட்டிக்கு கொரோனா வந்த நிலையில், அவரது பங்களாவுக்கு சீல் வைக்கப்பட்டது. அவரும் கொரோனா பரிசோதனை செய்துகொண்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இது பரபரப்பாகி இருந்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அவர் மகன் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கும் கொரோனா தொற்று பரவியது.
கொரோனா
இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். பின்னர் இரண்டாவதாக நடத்தப்பட்ட பரிசோதனையில் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் அவர் மகளுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில், பிரபல நடிகை ராச்சல் ஒயிட்-டுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராச்சல் வொயிட்
இவர், இம்ரான் ஹாஸ்மி, கங்கனா நடித்த உங்கிலி உட்பட சில இந்தி படங்களில் நடித்துள்ளார். பெங்காலி படங்களிலும் நடித்துள்ள இவர், தமிழில் அஜித்தின் மங்காத்தா படத்தில் சின்ன கேரக்டரில் நடித்திருந்தார். மீடு புகார் வெளியான காலகட்டத்தில் பிரபல இந்தி இயக்குனர் சஜித் நதியத்வாலா மீது இவர் பாலியல் புகார் கூறியிருந்தார். இதனால் பரபரப்பாக பேசப்பட்டார்.
பயப்பட வேண்டாம்
இவர், தனது ட்விட்டர் கணக்கில், எனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். விரைவில் குணமடைய பிரார்த்தியுங்கள் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து சினிமா பிரபலங்களும் ரசிகர்களும், தைரியமாக இருங்கள், பயப்பட வேண்டாம். இதில் இருந்து மீண்டு விடுவீர்கள் என்று நம்பிக்கை அளித்துள்ளனர்.