Don't Miss!
- News நீதித்துறைக்கு பெரும் அச்சுறுத்தல்- 600 வழக்கறிஞர்கள் திடீர் கடிதம்! காங்கிரஸ் மீது மோடி பாய்ச்சல்!
- Finance திருமணமான இந்துக்கள் கூடுதலாக வரி சேமிப்பதற்கான வழிமுறைகள் – ஜெரோதா CEO சொன்ன ஐடியா..!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
பிரபல நடிகை ஆர்த்தி அகர்வால் திடீர் மரணம்
‘பம்பரக் கண்ணாலே' படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமான ஆர்த்தி அகர்வால் (31) அமெரிக்காவில் திடீர் மரணம் அடைந்தார்.
1984-ல் பிறந்த ஆர்த்தி அகர்வால் அமெரிக்காவில் நியூ ஜெர்ஸியில் பிறந்தவர் ஆர்த்தி அகர்வால். 2001-ல் பாகல்பன் என்ற தெலுங்குப் படத்தில் அறிமுகமானார். அடுத்து வெங்கடேஷ் ஜோடியாக நுவ்வு நாக்கு நச்சவ் என்ற படத்தில் நடித்தார்.
இதன் மூலம் அவர் தெலுங்கில் பிரபல நடிகையானார்.
தமிழில் பம்பரக் கண்ணாலே படத்தின் மூலம் 2005-ல் அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ந்து தெலுங்கிலேயே நடித்து வந்தார். 2009-ல் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவுக்கே திரும்பினார்.
அதன் பிறகு படங்களில் நடிக்காமல் இருந்தவர், சமீபத்தில்தான் ரணம் 2 என்ற தெலுங்குப் படத்தில் மீண்டும் நடித்தார்.
உடல் நலக் கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
அவருக்கு ஆஸ்த்மா கோளாறு என்பதால் மரணமடைந்ததாக சிலர் தெரிவித்துள்ளனர். இன்னொரு பக்கம், லைப்போசக்ஷன் எனும் கொழுப்பு நீக்க அறுவைசிகிச்சை செய்ததன் காரணமாகவே, மோசமான பின் விளைவுகள் ஏற்பட்டு அவர் இறந்ததாகவும் கூறுகிறார்கள்.
ஆர்த்தி அகர்வாலின் மரணம், தெலுங்கு திரையுலகை அதிர வைத்துள்ளது.