Don't Miss!
- Finance என்னோட கணக்கே வேற தம்பி.. TCS கே.கிருத்திவாசன் அதிரடி அறிவிப்பு..!
- Lifestyle முருங்கைக்காய் கத்திரிக்காயை வெச்சு ஒருடைம் இப்படி கார குழம்பு செய்யுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க
- News லோக்சபா தேர்தல்.. தமிழ்நாட்டையே சுற்றி செல்லும் சிறப்பு ரயில் அறிவிப்பு.. கோவைக்கு லட்டு நியூஸ்
- Technology அதிரி புதிரி ஆர்டர்.. 108எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. ஆஃபரில் ரெட்மி 5ஜி போன்.. எந்த மாடல்?
- Education காரக்பூர் ஐஐடி-யில் செயற்கை நுண்ணறிவு படிப்பு படிக்க ஆசையா...!!
- Automobiles திரும்பி வரதே வாங்கிய அடிய திருப்பி கொடுக்கதானா! ஃபேமிலியோட போற மாதிரியான காருக்கு பேடண்ட் பதிவை பெற்ற ஃபோர்டு
- Sports இந்திய அணியில் இருந்து ஹர்திக் பாண்டியாவை கழட்டி விட திட்டம்.. ரோஹித் - அகர்கர் சந்திப்பில் ட்விஸ்ட்
- Travel தமிழக அரசு சார்பில் சென்னையில் கோடை நீச்சல் முகாம்கள் – உங்கள் வீட்டு குட்டீஸ்களை சேர்க்க மறக்காதீர்கள்!
"கடவுளின் படைப்பில் பெண்கள் உடல் அழகானது”.. நிர்வாண யோகா புகைப்படங்களை வெளியிட்ட பிக் பாஸ் நடிகை!
இந்தி சீரியல் நடிகை ஆஷ்கா, நிர்வாணமாக யோகா பயிற்சி மேற்கொண்ட போது எடுக்கப்பட்ட தனது போட்டோக்களை சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை: 'பெண்ணின் உடல் அழகானது' என ஆடையில்லாமல் நிர்வாணமாக யோகா செய்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான நடிகை ஆஷ்கா.
இந்தி தொலைக்காட்சி நாடகங்களில் நடித்து பிரபலமானவர் ஆஷ்கா கோர்டியா. இவர் நடிப்பில் வெளியான நாகினி சீரியல் சூப்பர் ஹிட்டானது. நாகினி தொடரில் ஆஷ்காவின் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது.
சீரியலே போதும்:
ஆஷ்காவை சினிமாவில் நடிக்க வைக்க பல இயக்குனர்கள் முயற்சித்தனர். ஆனால் அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை. தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பதே போதுமானது என நிறுத்திக்கொண்டார். ஆனால், இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசனின் கலந்து கொண்டார் ஆஷ்கா. அதன் மூலம் மேலும் நல்ல பெயரை அவர் சம்பாதித்தார்.
நிர்வாண யோகா:
எப்போதும் சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பவரான ஆஷ்காவை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். இதனால் தன்னைப் பற்றிய பதிவுகளை, புகைப்படங்களை அவ்வப்போது சமூகவலைதளப் பக்கத்தில் ஆஷ்மா வெளியிட்டு வருகிறார். உடலை பிட்டாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் உடையவரான அவர், சமீபத்தில் வித்தியாசமான முறையில் நிர்வாணமாக யோகா பயிற்சி மேற்கொண்டார்.
|
அழகானது:
அதனை தற்போது புகைப்படமாக எடுத்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "இந்திய பெண்கள் தங்கள் உடலை எப்போதும் துணியால் மூடி வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. அது தேவையும் இல்லை. கடவுளின் படைப்பில் பெண்களின் உருவ அமைப்பு அற்புதமானது. போற்றத்ததக்கது. பாதுகாக்கப்பட வேண்டியது. மொத்தத்தில் அழகானது.
|
வைரலான புகைப்படங்கள்:
பெண் உருவம் என்பது மனித வாழ்க்கையை உருவாக்கும் சிறந்த வாகனம். ஆகவே அந்த வாகனத்தை எந்த சூழ்நிலையிலும் சிதைத்துவிடக்கூடாது. கொண்டாடி மகிழ வேண்டும்" என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆஷ்காவின் இந்த புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது. அவரது ரசிகர்கள், சமூக வலைதளங்களில் இதனை பரப்பி வருகிறார்கள்.