Don't Miss!
- News ஓட்டு போட சொந்த ஊர் போனவங்களுக்கு வந்த குட்நியூஸ்.. சென்னைக்கு இன்று முன்பதிவில்லா ஸ்பெஷல் ரயில்
- Finance சென்னை லயோலா-வில் படித்த அஜித்.. பெங்களூரிலேயே காஸ்ட்லியான இடத்தை வாங்கியிருக்கிறார்.. யார் இவர்..?
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பட வாய்ப்பே இல்லை..கவர்ச்சியில் இறங்கிய நடிகை.. பொழைக்க தெரிஞ்ச புள்ளதான்!
சென்னை : திறமை, அழகு அனைத்தும் இருந்தும் படவாய்ப்பு இல்லாததால் நடிகை ஆத்மிகா கவர்ச்சி ரூட்டுக்கு மாறியுள்ளார்.
ஹிப்ஹாப் ஆதி இயக்கத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான மீசைய முறுக்கு படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ஆத்மிகா.
கோயம்புத்தூர் பெண்ணான இவர் சினிமாவின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக தனது சொந்த முயற்சியால் சினிமாவுக்குள் நுழைந்தார். இவர் அறிமுகமான முதல் படமே பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
புனித் ராஜ்குமாருக்கு விருது..பெங்களூர் சென்றடைந்தார் ரஜினி..சிறப்பான வரவேற்பு!
நடிகை ஆத்மிகா
ஆத்மிகா நடித்த முதல் படமே ஹிட்டடித்தால், கார்த்திக் நரேன் இயக்கத்தில் நரகாசூரன் படத்தில் நடிக்க கமிட் ஆனார். இந்த படம் வெளியாகாமல் முடங்கியது, நரகாசூரன் படம் வெளியாகி இருந்தால், ஆத்மிகா தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்திருப்பார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பட வாய்ப்பின்றி தவித்து வந்த ஆத்மிகாவுக்கு கோடியில் ஒருவன் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
படவாய்ப்பு இல்லை
கடந்த ஆண்டு ரிலீசான இப்படமும் அவருக்கு பெரிதாக பெயரை பெற்றுத்தரவில்லை. தற்போது அவர் கைவசம் உதயநிதியின் கண்ணை நம்பாதே திரைப்படம் மட்டுமே உள்ளது. இதன்பின் ஒரு படம் கூட கைவசம் இல்லாததால் இன்ஸ்டாகிராமில் விதவிதமாக புகைப்படங்களை ஷேர் செய்து வாய்ப்பு தேடி வருகிறார் ஆத்மிகா. ஆனால், அதிலும் வாய்ப்பு வராததால் அம்மணி அப்செட்டாகி உள்ளார்.
பொழைக்க தெரிஞ்ச புள்ள
இனியும் இழுத்து மூடிக்கொண்டு போஸ்ட் போட்டால் உதவாது என்று தெரிந்து கொண்ட ஆத்மிகா, கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சி காட்டி வருகிறார். சரி படவாய்ப்பு வருதோ இல்லையோ இன்ஸ்டாகிராம் வருமானம் வந்தால் போதும் என்று முழு மூச்சா கவர்ச்சி ரூட்டுக்கே மாறிவிட்டார் ஆத்மிகா. இந்த தகவலை கேள்விப்பட்டவுடன் பொழைக்க தெரிஞ்ச புள்ளதான் என கூறி வருகின்றனர்.
மறைமுக குற்றச்சாட்டு
அண்மையில், ஆத்மிகா, தனது ட்விட்டர் சிலருக்கு ஏணியில் ஏற ஈஸியாக வாய்ப்பு கிடைத்து விடுகிறது. ஆனால் மற்றவர்கள் என குறிப்பிட்டு பாத்துக்கலாம் என பதிவிட்டு இருந்தார். இது ஷங்கர் மகளுக்கு அடுத்தடுத்து பெரிய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தத்தைத் தான் ஆத்மிகா மறைமுகமாக குற்றம் சாட்டி இருந்தார். இதற்கு ரசிகர்கள் பலர் ஆத்மிகாவுக்கு ஆதரவாக பேசி இருந்தனர்.