Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வாய்ப்புக்காகப் படுக்கைக்கு அழைக்கும் வழக்கம்.. மாட்டிக்கொள்ளும் அப்பாவிகள்.. பிரபல நடிகை பகீர்!
சென்னை: சினிமாவில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான அனுபவங்களையும் மிரட்டல்களையும் எதிர்கொள்கிறார்கள் என்று பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.
Recommended Video
இந்தி, தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாள மொழிகளில் நடித்து வருபவர், அதிதி ராவ் ஹைதாரி.
தமிழில் சாரதா ராமநாதன் இயக்கிய சிருங்காரம் என்ற படம் மூலம் தமிழுக்கு வந்தார். இதில் தேவதாசியாக நடித்திருந்தார்.
அங்க மட்டும் கை வச்சு புடிக்காம இருந்தா.. ரியாலிட்டி ஷோ பிரபலத்தை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
காற்று வெளியிடை
பின்னர் இந்தியில் டெல்லி 6, ராக்ஸ்டார், மர்டர் 3, பத்மாவத் உட்பட சில படங்களில் நடித்தார். பின்னர் பத்து வருடங்களுக்குப் பிறகு, மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படம் மூலம் தமிழுக்கு, மீண்டும் வந்தார். இதில் கார்த்தி ஜோடியாக அவர் நடித்திருந்தார். ஸ்ரத்தா ஶ்ரீநாத், ஆர்.ஜே.பாலாஜி உட்பட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்த இந்தப் படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
லாக்டவுன்
இந்தப் படத்தை அடுத்தும் மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம், மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி பார்வையற்றவராக நடித்த 'சைக்கோ' படங்களில் நடித்தார். இதிலும் இவர் நடிப்பு பேசப்பட்டது. இப்போது விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார், நடன இயக்குனர் பிருந்தா இயக்கும் ஹே சினாமிகா படங்களில் நடித்து வருகிறார். லாக்டவுன் காரணமாக இந்தப் படங்களின் ஷூட்டிங் தடைபட்டுள்ளது.
சுஃபியும் சுஜாதாயும்
இவர் நடித்த மலையாள படமான, சுஃபியும் சுஜாதாயும் (Sufiyum Sujathayum) என்ற படம் கடந்த சில நாட்களுக்கு முன் அமேசான் ஒடிடி தளத்தில் வெளியானது. ஜெயசூர்யா ஹீரோவாக நடித்திருந்தார். இந்நிலையில் நடிகை அதிதி ராவ் சமீபத்தில் பேட்டி அளித்தார். அப்போது சினிமாவில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருக்கிறது என்று கூறப்படுவது பற்றி அவரிடம் கேட்டனர்.
சினிமாவில் சகஜம்தான்
இந்தக் கேள்விக்குச் பல நடிகைகள் பதில் கூறியுள்ளனர். இது சினிமாவில் சகஜம்தான் என்றும் 90 சதவிகிதம் இது நடக்கிறது என்றும் சில அப்பாவி நடிகைகள் இதில் சிக்கிக் கொள்வதாகவும் பல நடிகைகள் இதுபற்றி தெரிவித்துள்ளனர். சமீபத்தில் கூட நடிகை தேஜஸ்வி இதுபற்றி கூறியிருந்தார். சில நடிகைகள், தங்களுக்கு அப்படி ஏதும் நடக்கவில்லை என்று கூறியுள்ளனர். இந்நிலையில் இதுபற்றி அதிதி ராவ் கூறியிருப்பதாவது;
அதிர்ஷ்டம் காரணம்
'சினிமா இன்டஸ்ட்ரியில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான அனுபவங்களையும் மிரட்டல்களையும் எதிர்கொள்கிறார்கள். சிலர், இதுபோன்ற மிரட்டல்களில் இருந்து புத்திசாலித்தனமாக தப்பி விடுகிறார்கள். சில அப்பாவிகள் மாட்டிக்கொள்கிறார்கள். நான் அதில் இருந்து தப்பித்திருப்பதற்கு என் அதிர்ஷ்டம்தான் காரணம். இவ்வாறு கூறியிருக்கிறார். இதனால் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருக்கிறது என்பதை அவர் மறைமுகமாக வெளிப்படுத்தி இருக்கிறார் என்கிறார்கள்.
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்