twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முன் ஜாமீன் கேட்டு நடிகை அல்போன்சா மனு!

    By Shankar
    |

    தன் கணவரை மீட்டுத் தரக் கோரி பெண் ஒருவர் கொடுத்த புகாரில், முன் ஜாமீன் கோரி நடிகை அல்போன்சா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    மயிலாடுதுறையைச் சேர்ந்த சுமித்ரா என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த மாதம் ஒரு புகார் மனு அளித்தார்.

    Actress Alphonsa seeks bail

    அதில், ஜெய்சங்கர் என்பவருடன் 2013-ஆம் ஆண்டு எனக்குத் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு எனது கணவர் பல நாள்கள் வீட்டுக்கு வராமல் இருந்தார். ஒரே ஒரு நாள் மட்டுமே என்னுடன் வாழ்ந்தார்.

    இதற்கிடையில், முகநூலில் தன் மனைவி அல்போன்சா என்று கூறி படங்களை பதிவேற்றம் செய்துள்ளார். எனவே, என் கணவரை அல்போன்சாவிடம் இருந்து மீட்டுத்தர வேண்டும்," என தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில், இந்தப் புகார் குறித்து சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தன் மீது வழக்குப்பதிவு செய்யலாம் எனக் கருதி தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என நடிகை அல்போன்சா உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

    இந்த மனு, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீதான விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    English summary
    Actress Alphonsa has filed petition for an anticipatory bail in abducting case.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X