Don't Miss!
- News அமேதி தொகுதியில் ராகுல் காந்தி "மைத்துனர்" ராபர்ட் வதேரா போட்டியா? காங்கிரஸ் போஸ்டர்களால் பரபரப்பு!
- Technology ATM.. டெபிட் கார்டு.. கிரெடிட் கார்டு இருக்கா? ரிசர்வ் வங்கி வெளியிட்ட புது விதி.. இனி சிக்கலே இருக்காது..
- Automobiles இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
முன் ஜாமீன் கேட்டு நடிகை அல்போன்சா மனு!
தன் கணவரை மீட்டுத் தரக் கோரி பெண் ஒருவர் கொடுத்த புகாரில், முன் ஜாமீன் கோரி நடிகை அல்போன்சா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மயிலாடுதுறையைச் சேர்ந்த சுமித்ரா என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த மாதம் ஒரு புகார் மனு அளித்தார்.
அதில், ஜெய்சங்கர் என்பவருடன் 2013-ஆம் ஆண்டு எனக்குத் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு எனது கணவர் பல நாள்கள் வீட்டுக்கு வராமல் இருந்தார். ஒரே ஒரு நாள் மட்டுமே என்னுடன் வாழ்ந்தார்.
இதற்கிடையில், முகநூலில் தன் மனைவி அல்போன்சா என்று கூறி படங்களை பதிவேற்றம் செய்துள்ளார். எனவே, என் கணவரை அல்போன்சாவிடம் இருந்து மீட்டுத்தர வேண்டும்," என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இந்தப் புகார் குறித்து சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தன் மீது வழக்குப்பதிவு செய்யலாம் எனக் கருதி தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என நடிகை அல்போன்சா உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீதான விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.