Amala Paul: தொடர் சர்ச்சை.. எதுவுமே வேண்டாம் ஆளவிடுங்கப்பா.. அமைதியை விரும்பும் அமலா பால்!
சென்னை: இன்ஸ்டாகிராம் 5 மில்லியன் பாலோவர்களை வைத்து இருக்கும் அமலா பால், புகைப்படத்திற்கு வெளியிட்டிருக்கும் கேப்ஷனைப்பார்த்து ரசிகர்கள் என்ன ஆச்சு என கேட்டு வருகின்றனர்.
நீலதாமரை என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான அமலா பால், தொடர்ந்து வீரசேகரன் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

சிந்து சமவெளி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த இரு படங்களுமே அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை.
அமலா பால்: சிந்து சமவெளி படத்தைத் தொடர்ந்து மைனா படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பேமஸ் ஆனார். அப்படத்தில் முத்த காட்சி சரியாக வராததால் 20 டேக் சென்றதாகவும், இதற்காக நடிகர் விதார்த்துக்கு தனியாக பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் கூட அமலா பால் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

டாப் நடிகர்களுடன்: அதன் பின் விஜய், தனுஷ், ஜெயம் ரவி, விக்ரம், உள்ளிட்ட நடிகர்கள் பலருடன் நடித்திருந்த அமலாபால் சமீப காலமாக நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். இதையடுத்து ஏ.எல். விஜயை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு சில நாட்கள் விலகி இருந்த அமலா பால், அவரை விவாகரத்து செய்துவிட்டு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்தார்.
தொடர் சர்ச்சை: ஆடை படத்தில் ஆடையே இல்லாமல் பல காட்சிகளில் நடித்து கெட்ட பேர் எடுத்த அமலா பாலுக்கு ஒரு கட்டத்தில் படவாய்ப்பு இல்லாமல் போனதால் இருக்கும் இடம் தெரியாமல் இருந்தார். தன்னை வைத்து யாரும் படம் எடுக்காததால், அமலா பாலோ கடாவர் என்ற படத்தை தயாரித்து ஓடிடியில் வெளியிட்டார்.

எதுவுமே வேண்டாம் ஆளவிடுங்கப்பா: எப்போதும் சமூகவலைத்தளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வலம் வந்த அமலா பால் நேற்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமைதியாக தியானம் செய்வது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு, அதற்கு கேப்ஷனாக குழப்பமான உலகில் அமைதியின் கிசுகிசுக்கள் என பதிவிட்டன. இந்த படங்களைப் பார்த்த ரசிகர்கள், கவர்ச்சி அமலாபால் அமைதியான அமலாபால் ஆக மாறியது ஏன்? என்பது உள்பட பல்வேறு கருத்துக்களை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











