சாமுராய் நாயகி அனிதாவுக்கு திருமணம்... வங்கி அதிகாரியை மணந்தார்!
தமிழில் சாமுராய் படத்தில் விக்ரம் ஜோடியாக அறிமுகமான நடிகை அனிதா, வங்கி அதிகாரியை காதலித்து மணந்தார்.
2002-ல் பாலாஜி சக்திவேல் இயக்கிய முதல் படமான 'சாமுராய்' படத்தில் விக்ரம் ஜோடியாக நடித்தவர் அனிதா.
தொடர்ந்து 'வருஷமெல்லாம் வசந்தம்', 'சுக்ரன்' ஆகிய படங்களில் நாயகியாக நடித்தார்.

பின்னர் ஜேகே ரித்திஷ் நடித்த 'நாயகன்' படத்திலும், மகராஜா என்ற படத்திலும் நடித்தார். பின்னர் சினிமாவை விட்டு விலகி இந்தி சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.
கோவாவைச் சேர்ந்த வங்கி அதிகாரி ரோஹித் ரெட்டியை தீவிரமாகக் காதலித்து வந்தார் அனிதா. இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்ததால், சில தினங்களுக்கு முன் கோவாவில் சம்பிரதாய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
இந்தத் திருமணம் நான்கு தினங்கள் வட இந்திய வழக்கப்படி நடந்தது.


Click it and Unblock the Notifications











