பழம்பெரும் நடிகை அஞ்சலி தேவி காலமானார்
சென்னை: பழம்பெரும் நடிகையான அஞ்சலி தேவி உடல் நலக்குறைவால் இன்று மரணம் அடைந்தார்.
ஆந்திராவில் பிறந்தவர் நடிகை அஞ்சலி தேவி. அவர் தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் கணவனே கண்கண்ட தெய்வம், சர்வாதிகாரி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
சென்னையில் வசித்து வந்த அஞ்சலி தேவி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஒரு வாரமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிர் இழந்தார். அவருக்கு வயது 86.
இசையமைப்பாளர் ஆதிநாராயண ராவை மணந்த அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அஞ்சலி தேவியின் பேத்தி சைலா ராவ் ஒரு நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications












