Don't Miss!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு ஆப்பு வைத்த சிஎஸ்கே வீரர்.. டி20 உலககோப்பையில் சேர்க்க ரெய்னா கோரிக்கை
- News விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ணக்கோரிய வழக்கு: இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது உச்ச நீதிமன்றம்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Finance ரிலையன்ஸ் ஜியோ மூத்த அதிகாரி திடீர் ராஜினாமா..!!
- Automobiles ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- Lifestyle குரு பார்வை இருந்தால் திருமணம் நடந்துவிடுமா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் படத்தில் கமிட்டான நடிகை அஞ்சலி.. தீயாய் பரவும் தகவல்!
சென்னை: ஷங்கர் இயக்கும் புதிய படத்தில் நடிகை அஞ்சலி ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அஞ்சலி.
சிக்ஸ் பேக்கில் அசத்தும் சிம்பு… வெந்து தணிந்தது காடு மாஸா போகுது… குஷியில் ரசிகர்கள் !
மாடல் அழகியாக இருந்த அஞ்சலி போட்டோ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.
தமிழில் கற்றது தமிழ் படம் மூலம்
தொடர்ந்து தெலுங்கு படத்தில் நடித்த அஞ்சலி கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். அதன்பிறகு ஆயுதம் செய்வோம், அங்காடித் தெரு, ரெட்டை சுழி, மகிழ்ச்சி, தூங்கா நகரம், கருங்காளி, மங்காத்தா, எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக பாவக்கதைகள்
மேலும் கலகலப்பு, வத்திக்குச்சி, சேட்டை, சகலகலா வல்லவன், பேரன்பு, சைலன்ஸ், நாடோடிகள் 2 உட்பட பல படங்களில் நடித்துள்ளார். அவரது நடிப்பில் கடைசியாக தமிழில் பாவ கதைகள் ஆந்தாலஜி படம் வெளியானது. தெலுங்கில் வக்கீல் சாப் என்ற படம் கடைசியாக வெளியானது.
தமிழில் முன்னணி நடிகையாக
அஞ்சலி நடிப்பில் வெளியான அங்காடித் தெரு, சேட்டை, கலகலப்பு, சகலகலா வல்லவன் ஆகிய படங்கள் அவரை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றது. இந்நிலையில் தற்போது எஃப் 3 என்ற தெலுங்கு படத்திலும் பைராகி என்ற கன்னட படத்திலும் நடித்து வருகிறார் அஞ்சலி.
தயாரிப்பாளரின் கட்டுப்பாட்டில்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் அஞ்சலி, கைவசம் சொல்லிக் கொள்ளும்படி பெரிதாக எந்த படம் வைத்திருக்கவில்லை. அடிக்கடி காதல் சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார் அஞ்சலி. தமிழில் முன்னணி நடிகர் ஒருவருடன் கிசுகிசுக்கப்பட்ட அஞ்சலி பின்னர் தெலுங்கில் தயாரிப்பாளர் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தகவல் வெளியானது.
காதல் தோல்வியில் முடிந்தது
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் காதல் உறவில் இருந்தது உண்மைதான் என்றார். அந்த காதல் தோல்வியில் முடிந்து விட்டதாகவும் கூறினார் நடிகை அஞ்சலி. அந்த காதல் நன்றாக சென்றிருந்தால் நானே எல்லோருக்கும் சொல்லியிருப்பேன் என்றும் நடிகை அஞ்சலி தெரிவித்திருந்தார்.
ஷங்கர் இயக்கத்தில் ஒப்பந்தம்
தமிழில் பட வாய்ப்புகள் சரிவர அமையாததால் தெலுங்கு, கன்னடம், மலையாள போன்ற பிற மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், இயக்குநர் ஷங்கர் - ராம்சரண் கூட்டணியில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகும் படத்தில் நடிகை அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்த மாதம் படப்பிடிப்பு
இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஏற்கனவே ஒப்பந்தமாகி உள்ளார். இதில் தற்போது அஞ்சலியும் இணைந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஹைதராபாத்தில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே.. ரஜினியின் 171 ஆவது பட டைட்டில் கூலி.. ரசிகர்கள் செம வரவேற்பு
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!
-
நான் பிச்சை எடுத்தாலும் மக்களுக்கான சேவை தொடர்ந்து செய்வேன்! நடிகர் பாலா உருக்கமான பேட்டி!