Don't Miss!
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- News பிறந்தது சென்னை தான்.. ஆனா கன்னடா தெரியுமா? பிரசாரத்தில் தமிழர்களிடம் சிவராஜ் குமார் திடீர் கேள்வி
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Lifestyle சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பட்டுப் புடவையும் குட்டி பப்பியும்.. நடிகை அஞ்சலி போலோ உடன் எடுத்த க்யூட் புகைப்படங்கள்!
சென்னை : பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் ஹீரோவாக நடித்து வரும் தெலுங்கு திரைப்படத்தில் அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
முதல் முறையாக ராம் இயக்கத்தில் நிவின்பாலி நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தனுஷ்கோடியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இதில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இருக்குற கலவரம் பத்தாதா பிக்பாஸ்? ஏன் இப்படி? புரமோவால் பீதியாகும் நெட்டிசன்ஸ்!
இந்த நிலையில் பட்டுப் புடவையில் தான் செல்லமாக வளர்க்கும் போலோ பப்பியுடன் எடுத்துக்கொண்ட க்யூட் புகைப்படங்களை இப்பொழுது பகிர்ந்துள்ளது வைரலாகி உள்ளது.
நேரடியாக தெலுங்கு திரைப்படம்
அறிமுகமான முதல் படத்திலிருந்தே வித்தியாசமான கதைகளைத் தொடர்ந்து ஏற்று நடித்து வரும் நடிகை அஞ்சலி தென்னிந்தியாவின் மிகப் பிரபலமான முன்னணி நடிகையாக உள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். பிரம்மாண்ட படங்களை இயக்கிய தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்கு உயர்த்தி இயக்குனர் ஷங்கர் இப்பொழுது நேரடியாக தெலுங்கு திரைப்படம் ஒன்றை இயக்குகிறார்
முக்கிய வேடத்தில்
தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் ராம் சரண் நடிப்பில் உருவாகும் இந்தப் படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளங்கள் நடிக்க நடிகை அஞ்சலியும் இதில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. கதாநாயகியாக கியாரா அத்வானி நடித்து வருகிறார்.
ராம் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில்
கற்றது தமிழ் தொடங்கி இயக்குனர் ராம் இயக்கத்தில் தரமணி மற்றும் பேரன்பு வரை தொடர்ந்து ஒவ்வொரு படங்களிலும் கதாநாயகியாக நடித்து வரும் அஞ்சலி இப்பொழுது மீண்டும் ராம் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நிவின் பாலி கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குனர் ராம் இயக்கி வர இதன் படப்பிடிப்பு தனுஷ்கோடியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Recommended Video
பட்டுப்புடவையில் போலோ பப்பியுடன்
தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் உருவாகும் இந்த படத்தில் நிவின் பாலி மற்றும் அஞ்சலி இலங்கை தமிழராக நடிக்கின்றனர் என கூறப்படுகிறது. இதற்கிடையில் பூச்சாண்டி,காண்பது போய் உள்ளிட்ட படங்கள் அஞ்சலிக்கு அடுத்தடுத்து ரிலீஸ் ஆக இருக்க உள்ளது. இந்த நிலையில் பட்டுப்புடவையில் செல்லமாக வளர்க்கும் போலோ பப்பி குட்டியுடன் கொஞ்சி விளையாடும் க்யூட் புகைப்படங்களை இப்பொழுது பகிர்ந்துள்ளது வைரலாகி வருகிறது.