ஒய்யாரமா சோபாவில்.. அனு இமானுவேல் புது போட்டோசூட் !
சென்னை : அனு இமானுவேல் தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டில் இருந்தபடியே ஒரு சிறிய போட்டோசூட்டை செய்திருக்கிறார்.
Recommended Video
வீட்டில் இருக்கும் நேரத்தில் தங்களுக்கு பிடித்த விஷயங்களில் பிரபலங்கள் ஈடுபட்டு வரும் நிலையில் அனு இமானுவேலும் தனக்கு பிடித்த விஷயமான போட்டோசூட்டை செய்திருக்கிறார். இந்த புகைப்படத்தில் ஒரு கை முழுக்க ஆடை இல்லாமலும் மற்றொரு கை முழுக்க ஆடை இருப்பதை போலவும் வடிவமைக்கபட்ட மாறுபட்ட ஆடையுடன் சோபாவில் படுத்த படி மிகவும் ஹாயாக சில போட்டோக்களையும் ,உட்கார்ந்து சில போட்டோக்களையும் எடுத்துள்ளார் .

இந்த போட்டோக்களில் அனு மிகவும் ஹாட்டாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். வழக்கம் போல இதயங்களை முத்தங்களையும் கொடுத்து தங்களின் அன்பை இணையத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேலும், இன்ஸ்டாகிராமில் அனு இமானுவேல் நான் தூங்குவதை தவிர்த்து அதிகபடியாக நெட்பிளிக்ஸ் பார்த்து வருகிறேன் நீங்கள் என்ன பண்றீங்க என்று கேட்டுள்ளார். அதையடுத்து உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியும் உடல் ஆரோக்கியமும் கிடைக்க வாழ்த்துகிறேன் என்றும் கூறியிருக்கிறார் .

இமானுவேல் கேட்ட கேள்விக்கு ரசிகர்கள் பதில் கூறி வருகின்றனர். பலரும் அனுவை போல இணையத்தில் படம் பார்த்து வருவதாகவும் வீடியோ கேம் விளையாடி வருவதாகவும் கூறி வருகின்றனர். சிலர் அனுவிற்கு வீட்டிலே இருங்கள் என்று அறிவுரையும் கூறியுள்ளனர் .

கொரோனா பாதிப்பு பலரையும் குழம்பி போக வைத்து விட்டது. இந்த நிலையில் தெளிவாக இருக்கும் சிலர் இணையத்தின் வாயிலாக இதை செய்யுங்கள் இதை செய்யாதீர்கள் என்று அறிவுறுத்தி வருகின்றனர். பெரும்பாலுமான பிரபலங்கள் வீட்டில் இருந்த படியே படம் பாருங்கள் அதே நேரத்தில் விளையாடுங்கள் என்றும் கூறி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











