Don't Miss!
- Automobiles இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- News இதுதான் நம்ம தமிழ்நாடு.. மூக்கு மேல் விரல் வைத்த ஈரோடு.. புது டிரஸ்ஸில்.. யாரிந்த 3 பெண்கள்.. சபாஷ்
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நடிக்க மறுத்த சமந்தா… ஒகே சொல்லி தட்டி தூக்கிய அனுஷ்கா ஷெட்டி!
சென்னை : கன்னட படம் ஒன்றில் சமந்தா நடிக்க மறுத்ததை அடுத்து அந்த படத்தில் நடிக்க அனுஷ்கா ஷெட்டி கமிட்டாகி உள்ளார்.
மாதவன் நடித்த இரண்டு திரைப்படத்தின் மூலம் தமிழில் தனது திரைப்பயணத்தை தொடங்கினார் அனுஷ்கா.
இதையடுத்து ரஜினி, விஜய்,சூர்யா, விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்தார்.
ஜூலியை ஆபாசமாக திட்டினாரா நிரூப்.. சிம்பு இதையெல்லாம் கேட்க மாட்டீங்களா என கொதிக்கும் ரசிகர்கள்!
அனுஷ்கா
தெலுங்கு திரையுலகில் அருந்ததி, தேவசேனா என பல வேடங்களில் நடித்து அதிக ரசிகர்களை சம்பாதித்தவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. இவர் ஆர்யாவுடன் இஞ்சி இடுப்பழகி நடத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்காக உடல் எடை கூடி குண்டாக மாறினார். ஆனால், அதன்பின் உடல் எடை குறையாததால் பல படவாய்ப்புகளை இழந்தார்.
திருமண ஏற்பாடு
39 வயதான அனுஷ்காவுக்கு பட வாய்ப்பு இல்லாததால், வீட்டில் திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்தன. அனுஷ்கா திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விடுவார் என்று ரசிகர்கள் நினைத்த நிலையில், கன்னட படம் ஒன்றில் கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடகப் பின்னணி பாடகி நாகரத்னம்மாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாக உருவாக உள்ள படத்தில் அனுஷ்கா ஒப்பந்தமாகி உள்ளார்.
நோ சொன்ன சமந்தா
இந்த படத்திற்காக சமந்தாவிடம் முதலில் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், இந்த படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டதால் இந்த வாய்ப்பு அனுஷ்காவுக்கு கிடைத்துள்ளது. நீண்ட நாட்களாக தமிழ் நேரடித் திரைப்படங்களில் நடிக்காமல் உள்ள அனுஷ்கா, தமிழ் சினிமாவுக்கு திரும்புவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏ.எல்.விஜய் இயக்கத்தில்
இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கும் புதிய தமிழ் படத்தில் நடிக்கவிருக்கிறாராம் அனுஷ்கா. பெண்களை மையமாக வைத்து இப்படம் உருவாகவிருக்கிறதாம். இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை. ஏ.எல்.விஜய் விஜய் கங்கனா ரனாவத்தை வைத்து தலைவி படத்தை இயக்கி இருந்தார். அது எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.