Just In
- 7 hrs ago
கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்!
- 7 hrs ago
டைட்டான டிரஸ்ஸில் மெட்ராஸ் பட நடிகையின் அசத்தல் லுக்!
- 7 hrs ago
செவுத்துல பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு சமந்தா கொடுத்த கலக்கலான கிறங்க வைக்கும் போஸ்!
- 7 hrs ago
ஆக்ட்ரஸ் ரோஷினி கிட்ட பந்தா கிடையாது காஸ்டியும் டிசைனர் ப்ரீத்தியின் முதல் பேட்டி
Don't Miss!
- News
சங்கமம் கலைநிகழ்ச்சிகளுடன் இன்று மினசோட்டா தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா!
- Automobiles
டாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...
- Sports
தம்பிகளா.. அப்படி ஓரமா போய் உட்காருங்க.. இளம் வீரர்களுக்கு நோ சான்ஸ்.. இந்திய அணி முடிவு!
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Lifestyle
எல்லோரும் விரும்பும் கூட்டாளராக நீங்க இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தண்ணி அடிக்கிறதை நான் ஏங்க மறைக்கணும்? அதுயென்ன கொடூரக் குற்றமா? கேட்கிறார் ஹீரோயின்!
கொச்சி: குடிப்பதை நான் ஏன் மறைக்க வேண்டும் என்றும் அது என்ன கொடூரக் குற்றமா? என்றும் கேட்டுள்ளார் பிரபல நடிகை.
மலையாள நடிகை, வீணா நந்தகுமார். மும்பையை சேர்ந்த இவர் ஆசிப் அலி ஜோடியாக நடித்த, கெட்டியோளனு என்ட மலகா (Kettiyolanu Ente Malakha) என்ற மலையாளப் படம் சமீபத்தில் வெளியாகி ஹிட்டாகியுள்ளது.
இதற்கு முன், கடம் கதா, ககுல்தாலியே கோழிபோரு ஆகிய மலையாளப் படங்களில் இவர் நடித்துள்ளார்.
அந்த கடவுள்தான்..அம்மன் நயன்தாராவை அப்படி விமர்சித்த ரசிகருக்கு ஆர்ஜே.பாலாஜி இப்படி கொடுத்த பதிலடி!

கல்பா ரெண்டு பெக்
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் அளித்த பேட்டியின்போது, 'நான் ரொம்ப பேசணும்னா, கல்பா ரெண்டு பெக் போடணும். அப்படின்னா நல்லா பேசிட்டே இருப்பேன். ஓவராவும் பேசுவேன். ரெண்டு பெக்குக்கு மேல முடியாது. என்னோட கெப்பாசிட்டி அவ்வளவுதான். இப்பலாம் உடம்பு தாங்க மாட்டேங்குது' என்று பேசி அதிர்ச்சிக் கொடுத்திருந்தார்.

ரசிகர்கள் ட்ரோல்
இதையடுத்து இவரை ரசிகர்கள் ட்ரோல் செய்தனர். இதற்கு இப்போது பதில் அளித்துள்ள வீணா நந்தகுமார், குடிப்பதை நான் ஏன் மறைக்கணும்? அதை சொல்ல ஏன் நான் பயப்படணும்?' என்று கேட்டுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, 'மது குடிக்கிறது என்ன கொடூரக் குற்றமா? நான் பீர் குடிப்பேன்னு ஏற்கனவே சொல்லி இருந்தேன்.

ஏன் கிண்டல் பண்ணணும்?
என்னைப்போல வயதுள்ள பலருக்கு இந்தப் பழக்கம் இருக்கிறது. பீர் மேல இருக்கிற என் காதலை சொல்றதுல நான் எப்பவும் வெட்கப்பட்டதே இல்லை. நான் சொன்னதை தவறாகப் புரிஞ்சுகிட்டு, என்னை ரசிகர்கள் கிண்டலடிக்கிறார்கள். ஏன் கிண்டல் பண்ணணும்? அவங்க செய்றது சரியா தவறாங்கறதை முதல்ல அவங்க சரி பார்க்கட்டும்.

கட்டுப்பாடு இல்லை
அப்புறம் சினிமாவைப் பொறுத்தவரை எந்த மாதிரி கேரக்டர்கள்ல நடிக்க முன்னுரிமை கொடுப்பீங்க?ன்னு கேட்கிறாங்க. நல்ல கதைன்னா நடிப்பேன். இப்படிதான் நடிக்கணும், இந்த கேரக்டர்லதான் நடிக்கணும்னு எந்த கட்டுப்பாடும் வச்சுக்கிறதில்லை. கிளாமர் கதைனாலும் நடிப்பேன். நல்ல கதைக்காக எதையும் செய்ய தயாரா இருக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார் வீணா.