Don't Miss!
- Finance பெங்களூர் தண்ணீர் பஞ்சத்தில் இப்படியொரு பிரச்சனையா..? அதிர்ச்சியான விஷயம் தான்..!
- News எதுக்கும் ரெஸ்பான்ஸ் இல்லை.. சென்னை ஏர்போட்டில் கொந்தளித்த பயணிகள்.. எமிரேட்ஸ் அலுவலகம் முற்றுகை
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Sports மும்பை இந்தியன்சின் ஏமாற்று வேலைக்கு இனி ஆப்பு.. புதிய நடைமுறையை கொண்டு வந்த ஐபிஎல் நிர்வாகம்
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தண்ணி அடிக்கிறதை நான் ஏங்க மறைக்கணும்? அதுயென்ன கொடூரக் குற்றமா? கேட்கிறார் ஹீரோயின்!
கொச்சி: குடிப்பதை நான் ஏன் மறைக்க வேண்டும் என்றும் அது என்ன கொடூரக் குற்றமா? என்றும் கேட்டுள்ளார் பிரபல நடிகை.
Recommended Video
மலையாள நடிகை, வீணா நந்தகுமார். மும்பையை சேர்ந்த இவர் ஆசிப் அலி ஜோடியாக நடித்த, கெட்டியோளனு என்ட மலகா (Kettiyolanu Ente Malakha) என்ற மலையாளப் படம் சமீபத்தில் வெளியாகி ஹிட்டாகியுள்ளது.
இதற்கு முன், கடம் கதா, ககுல்தாலியே கோழிபோரு ஆகிய மலையாளப் படங்களில் இவர் நடித்துள்ளார்.
அந்த கடவுள்தான்..அம்மன் நயன்தாராவை அப்படி விமர்சித்த ரசிகருக்கு ஆர்ஜே.பாலாஜி இப்படி கொடுத்த பதிலடி!
கல்பா ரெண்டு பெக்
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் அளித்த பேட்டியின்போது, 'நான் ரொம்ப பேசணும்னா, கல்பா ரெண்டு பெக் போடணும். அப்படின்னா நல்லா பேசிட்டே இருப்பேன். ஓவராவும் பேசுவேன். ரெண்டு பெக்குக்கு மேல முடியாது. என்னோட கெப்பாசிட்டி அவ்வளவுதான். இப்பலாம் உடம்பு தாங்க மாட்டேங்குது' என்று பேசி அதிர்ச்சிக் கொடுத்திருந்தார்.
ரசிகர்கள் ட்ரோல்
இதையடுத்து இவரை ரசிகர்கள் ட்ரோல் செய்தனர். இதற்கு இப்போது பதில் அளித்துள்ள வீணா நந்தகுமார், குடிப்பதை நான் ஏன் மறைக்கணும்? அதை சொல்ல ஏன் நான் பயப்படணும்?' என்று கேட்டுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, 'மது குடிக்கிறது என்ன கொடூரக் குற்றமா? நான் பீர் குடிப்பேன்னு ஏற்கனவே சொல்லி இருந்தேன்.
ஏன் கிண்டல் பண்ணணும்?
என்னைப்போல வயதுள்ள பலருக்கு இந்தப் பழக்கம் இருக்கிறது. பீர் மேல இருக்கிற என் காதலை சொல்றதுல நான் எப்பவும் வெட்கப்பட்டதே இல்லை. நான் சொன்னதை தவறாகப் புரிஞ்சுகிட்டு, என்னை ரசிகர்கள் கிண்டலடிக்கிறார்கள். ஏன் கிண்டல் பண்ணணும்? அவங்க செய்றது சரியா தவறாங்கறதை முதல்ல அவங்க சரி பார்க்கட்டும்.
கட்டுப்பாடு இல்லை
அப்புறம் சினிமாவைப் பொறுத்தவரை எந்த மாதிரி கேரக்டர்கள்ல நடிக்க முன்னுரிமை கொடுப்பீங்க?ன்னு கேட்கிறாங்க. நல்ல கதைன்னா நடிப்பேன். இப்படிதான் நடிக்கணும், இந்த கேரக்டர்லதான் நடிக்கணும்னு எந்த கட்டுப்பாடும் வச்சுக்கிறதில்லை. கிளாமர் கதைனாலும் நடிப்பேன். நல்ல கதைக்காக எதையும் செய்ய தயாரா இருக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார் வீணா.
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?
-
விக்ரமிற்கு தேசிய விருது கன்பார்ம்.. தங்கலான் மேக்கிங் வீடியோவை பார்த்து மிரண்ட ஃபேன்ஸ்!