Don't Miss!
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Sports அஸ்வின் நீங்க செஞ்சது பெரிய தப்பு.. உங்க தவறை மறைக்க ஜெய்ஸ்வாலை திட்டுவதா? என்ன நடந்தது?
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
எந்த ஜென்மத்திலும் அப்பாவுடன் பேசமாட்டேன்: பானு
தாமிரபரணி படத்தின் மூலம் கோலிவுட்டில் பிரபலமானவர் நடிகை பானு. முதல் படத்தில் கும்முனு வந்த அவர் அடுத்தடுத்த படங்களில் காற்றிறங்கிய பலூனாகி விட்டார். குறிப்பாக ஆர்கேவுடன் இணைந்து நடித்தபோது படு மெல்லிசாக காணப்பட்டார். இப்போது முன்பை விட மேலும் உடல் மெலிந்து காணப்படுகிறார். கேட்டால் டயட்டிங் என்கிறார்.
என்ன பானு உங்களை அடிக்கடி பார்க்க முடியவில்லையே என்று கேட்டால் எனக்கு கதாபாத்திரம் தான் முக்கியம். அதனால் தான் வரும் படங்களை எல்லாம் ஒப்புக் கொள்ளாமல், நல்ல கதாபாத்திரம் உள்ள கதைகளில் நடித்து வருகிறேன் என்றார்.
அம்மணி கேரளாவில் ஒரு பியூட்டி பார்லர் திறந்து அதை தனது அம்மாவின் பொறுப்பில் விட்டுள்ளார். இந்நிலையில் பானுவுக்கும் அவரது அப்பாவுக்கும் என்ன லடாயோ தெரியவில்லை தகப்பனை விட்டுப் பிரிந்துவிட்டார். இனி எந்த ஜென்மத்திலும் அவருடன் பேசவே மாட்டேன் என்கிறார். இனி எனக்கு எல்லாமே அம்மா தான் என்றும் கூறியுள்ளார்.
அப்பா மீது அப்படி என்ன கொலவெறியோ தெரியலையே...!