Don't Miss!
- News அத்தை ராதிகா பாஜக வேட்பாளர்.. திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் எம்.ஆர்.ராதா பேரன் வாசு விக்ரம்
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நான் இன்னும் அப்படியேதான் இருக்கிறேன்-பாரதி
அம்முவாகிய நான் படத்தில் விபச்சாரப் பெண்ணாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் பாரதி. அவருக்கு சரியான எதிர்காலம் தமிழ் சினிமாவில் உள்ளது என்று பலரும் கணித்தார்கள்.
ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் தனது உறவுக்காரரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார் பாரதி.
இவரது கணவர் சமீபத்தில் பண மோசடி தொடர்பாக தலைமறைவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் மீண்டும் நடிக்க வருகிறாராம் பாரதி.
இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழ், மலையாளத்தில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டேன். கடைசியாக, ஆயுதம் என்ற மலையாளப் படத்தில் சுரேஷ் கோபியுடன் நடித்தேன்.
அம்முவாகிய நான் நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. அதன் பிறகு திருமணம் செய்து கொண்டதால் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தேன். இப்போது ஒரு குழந்தைக்கும் தாயாகி எனது குடும்ப கடமைகளை முடித்து விட்டேன். அதனால் மீண்டும் நடிக்கத் தயாராகிவிட்டேன்.
திருமணத்துக்குப் பிறகும் உடம்பை கவனமாக பார்த்துக் கொண்டதால் அப்படியேதான் இப்போதும் இருக்கிறேன். திருமணத்துக்கு பிறகு ஹீரோயினாக நடிப்பது சிரமம் என்பது தெரியும். அதனால் நல்ல கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடிக்க முடிவு செய்திருக்கிறேன். முக்கியத்துவம் நிறைந்த கேரக்டர்கள் கொண்ட கதைகளை கேட்க ஆரம்பித்திருக்கிறேன் என்றார்.
மறுபடியும் நடிக்க வந்திருக்கிறாரே பாரதி, வீட்டில் ஏதாவது பிரச்சினையோ...?