Don't Miss!
- Finance PF பேலன்ஸ் தொகையை எளிதாக தெரிந்துகொள் 4 எளிய வழிமுறைகள்..!
- News 5 வருடமாக.. நீங்க பட்ட கஷ்டமெல்லாம் சரியாக போகுது! கன்னி ராசியை புரட்டி போடும் குரு பெயர்ச்சி.. பலன்
- Technology வந்துடுச்சு.. இந்த Samsung போனுக்கு பல பேர் வெயிடிங்.. 2 50MP கேமரா, 120Hz டிஸ்பிளே, IP67 ரேட்டிங், 5G ஆதரவு!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க கண்ண மூடிக்கிட்டு காதலில் விழுந்துருவாங்களாம்... ரொமான்ஸ்ல இவங்கள அடிச்சுக்க ஆளே இல்ல...!
- Automobiles சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
- Sports அங்க உயிரைக் கொடுத்து விளையாடுறாங்க.. ஒரு கேப்டனா நீ என்ன பண்ணிருக்கனும்.. ஹர்திக்கை பொளந்த பதான்!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
'முதன் முதலில் உங்களைச் சந்தித்தபோது...' காதலர் தினத்தில் கணவருக்கு காதல் கடிதம்... பாவனா உருக்கம்
சென்னை: காதலர் தனத்தில் தனது காதல் பற்றி நடிகை பாவனா வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு பரபரப்பாகி வருகிறது.
தமிழில், சித்திரம் பேசுதடி, ஜெயம் கொண்டான், தீபாவளி உட்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர், பாவனா. தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்தார்.
கன்னடத்தில் இவர் நடித்த படத்தை தயாரித்த நவீனுக்கும் இவருக்கும் காதல் மலர்ந்தது. 2018 ஆம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்துகொண்டனர்.
என்னம்மா இப்படி ஆயிட்டிங்க.. ஷாலு ஷம்முவின் உச்சக்கட்ட கவர்ச்சி.. ஒரு துணியையும் காணோம்!
கன்னட ரீமேக்
திருமணத்துக்குப் பிறகு நடிக்காமல் இருந்த பாவனா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் வெளியான '96' படத்தின், கன்னட ரீமேக்கில் நடித்தார். இதில் விஜய் சேதுபதி கேரக்டரில் கணேஷ் நடித்திருந்தார். இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதையடுத்து இப்போது, சிவராஜ்குமார் ஹீரோவாக நடிக்கும் பஜராங்கி 2 என்ற படத்தில் நடித்து வருகிறார்.
பெரிய பொட்டு
சூப்பர் ஹிட்டான பஜராங்கி படத்தின் அடுத்த பாகம் இது. ஹர்ஷா இயக்குகிறார். இந்தப் படத்தில் நடிகை பாவனாவின் லுக் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியிடப்ப்ட்டது. அதில் கழுத்தில் தாயத்து, நெற்றியில் பெரிய பொட்டு, தலையை விரித்து போட்டபடி ஆக்ரோஷமாக இருந்தார் பாவனா. இந்த லுக் வரவேற்பை பெற்றது.
உருக்கமான போஸ்ட்
இந்நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு உருக்கமான போஸ்ட் ஒன்றை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார் நடிகை பாவனா. அதில், கடந்த 2011 ஆம் ஆண்டு, நான் முதன் முதலில் உங்களைச் சந்தித்தபோது, 'எனக்கான அவர்' நீங்கள்தான் என்பது தெரியாது. தயாரிப்பாளர்- நடிகர் என்ற உறவில் இருந்து தொடர்ந்து நட்பானோம்.
நட்பில் இருந்தே
அவர்கள் சொல்வது போல, சிறந்த உறவுகள் நட்பில் இருந்தே தொடங்குகின்றன. நாங்கள் காதலில் விழுந்து 9 வருடங்கள் ஆகிவிட்டன. எங்களை காயப்படுத்திய விஷயங்களில் இருந்து நாங்கள் வலுவாகவே வெளியே வந்தோம். எல்லா முரண்பாடுகளுக்கும் எதிராகப் போராடுவோம். அதற்கு எதிராக வாழ்வோம். என்னுடன் நீங்கள் இருப்பதற்கு நன்றி. ஐ லவ் யூ' என்று தெரிவித்துள்ளார். தனது காதல் கணவருக்காக, அவர் எழுதிய இந்தப் பதிவு இணையத்தில் பரவலாகி வருகிறது.