Don't Miss!
- News கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு.. வைகையில் இன்று முதல் தண்ணீர் திறப்பு
- Finance தங்கம் விலை உயர்வை சமாளிக்க, நகை கடைகள் புதிய ஐடியா.. உஷாரா இருங்க மக்களே..!
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Lifestyle கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'முதன் முதலில் உங்களைச் சந்தித்தபோது...' காதலர் தினத்தில் கணவருக்கு காதல் கடிதம்... பாவனா உருக்கம்
சென்னை: காதலர் தனத்தில் தனது காதல் பற்றி நடிகை பாவனா வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு பரபரப்பாகி வருகிறது.
தமிழில், சித்திரம் பேசுதடி, ஜெயம் கொண்டான், தீபாவளி உட்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர், பாவனா. தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்தார்.
கன்னடத்தில் இவர் நடித்த படத்தை தயாரித்த நவீனுக்கும் இவருக்கும் காதல் மலர்ந்தது. 2018 ஆம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்துகொண்டனர்.
என்னம்மா இப்படி ஆயிட்டிங்க.. ஷாலு ஷம்முவின் உச்சக்கட்ட கவர்ச்சி.. ஒரு துணியையும் காணோம்!
கன்னட ரீமேக்
திருமணத்துக்குப் பிறகு நடிக்காமல் இருந்த பாவனா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் வெளியான '96' படத்தின், கன்னட ரீமேக்கில் நடித்தார். இதில் விஜய் சேதுபதி கேரக்டரில் கணேஷ் நடித்திருந்தார். இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதையடுத்து இப்போது, சிவராஜ்குமார் ஹீரோவாக நடிக்கும் பஜராங்கி 2 என்ற படத்தில் நடித்து வருகிறார்.
பெரிய பொட்டு
சூப்பர் ஹிட்டான பஜராங்கி படத்தின் அடுத்த பாகம் இது. ஹர்ஷா இயக்குகிறார். இந்தப் படத்தில் நடிகை பாவனாவின் லுக் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியிடப்ப்ட்டது. அதில் கழுத்தில் தாயத்து, நெற்றியில் பெரிய பொட்டு, தலையை விரித்து போட்டபடி ஆக்ரோஷமாக இருந்தார் பாவனா. இந்த லுக் வரவேற்பை பெற்றது.
உருக்கமான போஸ்ட்
இந்நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு உருக்கமான போஸ்ட் ஒன்றை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார் நடிகை பாவனா. அதில், கடந்த 2011 ஆம் ஆண்டு, நான் முதன் முதலில் உங்களைச் சந்தித்தபோது, 'எனக்கான அவர்' நீங்கள்தான் என்பது தெரியாது. தயாரிப்பாளர்- நடிகர் என்ற உறவில் இருந்து தொடர்ந்து நட்பானோம்.
நட்பில் இருந்தே
அவர்கள் சொல்வது போல, சிறந்த உறவுகள் நட்பில் இருந்தே தொடங்குகின்றன. நாங்கள் காதலில் விழுந்து 9 வருடங்கள் ஆகிவிட்டன. எங்களை காயப்படுத்திய விஷயங்களில் இருந்து நாங்கள் வலுவாகவே வெளியே வந்தோம். எல்லா முரண்பாடுகளுக்கும் எதிராகப் போராடுவோம். அதற்கு எதிராக வாழ்வோம். என்னுடன் நீங்கள் இருப்பதற்கு நன்றி. ஐ லவ் யூ' என்று தெரிவித்துள்ளார். தனது காதல் கணவருக்காக, அவர் எழுதிய இந்தப் பதிவு இணையத்தில் பரவலாகி வருகிறது.