Don't Miss!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்..!!
- News சூப்பரான சான்சை விட்டுடாதீங்க.. முக்கிய ராசிக்கு அடிக்க போகும் பம்பர் யோகம்.. குரு பெயர்ச்சி பலன்கள்
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தற்கொலை செய்த கணவரை நினைத்து கண்ணீர்விட்ட நடிகை.. 2வது திருமணத்திற்கு ரெடி.. நண்பரை மணக்கிறார்!
Recommended Video
சென்னை: கணவர் தற்கொலை செய்துகொண்டு இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் நடிகை பாவனி ரெட்டி இரண்டாவது திருமணத்திற்கு தயாராகியுள்ளார்.
நடிகை பாவனி ரெட்டி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்னத்தம்பி சீரியலில் நடித்து வருகிறார். அந்த சீரியலில் நந்தினி என்ற கேரக்டரில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
தெலுங்கு சீரியல் நடிகையான பாவனி ரெட்டி தமிழிலும் பிரபலமாகிவிட்டார். அதுமட்டுமின்றி சில படங்களிலும் நடித்துள்ளார்.
திருமண வாழ்க்கையில் குழப்பம்
நடிகை பாவனி ரெட்டி கடந்த 2013ஆம் ஆண்டு இவருடன் சீரியலில் நடித்த பிரதீப் என்ற நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து சந்தோஷமாக சென்ற இவர்களது வாழ்க்கையில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
கணவர் தற்கொலை
இருவருக்கும் ஏற்பட்ட குடும்பத் தகராறில் கடந்த 2017 மே மாதம் கணவர் பிரதீப் அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த பாவனி பின்னர் மீண்டும் சீரியலில் கவனம் செலுத்த தொடங்கினார்.
கண்ணீர்விட்ட நடிகை
இந்நிலையில் நமது பிலிமிபீட்டுக்கு நேர்காணல் அளித்துள்ளார் பாவனி ரெட்டி. அப்போது தனது கணவர் தற்கொலை குறித்து பேசிய அவர் கண்ணீர் விட்டு அழுதார். தான் மட்டும் சென்றிருந்தால் தனது கணவர் இந்நேரம் உயிரோடு இருந்திருப்பார் என்று கூறி கண்ணீர் விட்டார்.
கண்களில் வழிந்த கண்ணீர்
அவர் விளையாட்டுத்தனமாக செய்தது வினையாக முடிந்துவிட்டது என்றும் பாவனி கூறினார். தான் அழக்கூடாது என்ற வைராக்கியத்துடன் உள்ளேன் என்று கூறிய அவர் கண்களில் கண்ணீர் வழிந்ததை காண முடிந்தது.
குடும்ப நண்பருடன் திருமணம்
தொடர்ந்து பேசிய அவர் தான், இரண்டாவது திருமணத்திற்கு தயாராகிவிட்டதாக தெரிவித்துள்ளார். குடும்ப நண்பரான ஆனந்த் என்பவரை திருமணம் செய்துகொள்ள போவதாக கூறினார் பாவனி.
இதயத்துடிப்புடன் டாட்டூ
மேலும் தனது கையில் வறைந்துள்ள டாட்டூ குறித்து கேட்டதற்கு பதிலளித்த பாவனி, தனது முன்னாள் கணவர் பிரதீப் பெயரை ஹார்ட்டின் மற்றும் இதயதுடிப்புடன் வறைந்திருக்கும் டாட்டூவை காட்டினார். இதனை ஆனந்துதான் பரிசளித்தார் என்றும் கூறினார்.
வாழ்க்கை கொடுத்த ஆனந்த்
முழுக்க முழுக்க பெற்றோரால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் என்று அறிவித்துள்ள பாவனி, இம்மாதம் திருமணம் குறித்த தேதி அறிவிக்கப்படும் என்றார். தனது வாழ்க்கையே முடிந்து விட்டது என்று நினைத்திருந்த தனக்கு ஆனந்த் வாழ்க்கை கொடுப்பதாகவும் கூறினார்.
யாருக்கு தேங்க்ஸ்?
யாருக்கு சாரி சொல்ல விரும்புகிறீர்கள்? யாருக்கு தேங்க்ஸ் சொல்ல விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த பாவனி, தனது முன்னாள் கணவர் பிரதீப்புக்கு சாரியும் தனது வருங்கால கணவருக்கு தேங்க்ஸும் கூறினார்.
-
’கூலி’ 1000 கோடி வசூல் பண்ணும்.. மனசார வாழ்த்திய ரத்னகுமார்.. கமெண்ட்டில் திட்டும் ரஜினி ஃபேன்ஸ்!
-
கடைசியில சூப்பர் ஸ்டாரை சரவணா ஸ்டோர்ஸ் ஓனரா மாத்திட்டாங்களே.. இது வேறலெவல் ட்ரோல்.. செம சிங்க்!
-
தென்னிந்திய நைட்டிங்கேல் ஜானகி அம்மாவின் பிறந்தநாள்.. குரலில் எப்போதும் மழலையும், இளமையும் உண்டு