Don't Miss!
- Technology நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் டா.. ChatGPT-க்கு செக் வச்ச Google.. இனி மொபைல் யூசர்கள் Gemini பக்கம்!
- News மயிலாடுதுறையில் ஆச்சரியம்.. அந்த "வைக்கோல் மூட்டை".. ஆஹா, வைத்தீஸ்வரன் கோயில் தையல் நாயகி.. பரவசம்
- Automobiles கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தற்கொலை செய்த கணவரை நினைத்து கண்ணீர்விட்ட நடிகை.. 2வது திருமணத்திற்கு ரெடி.. நண்பரை மணக்கிறார்!
Recommended Video
சென்னை: கணவர் தற்கொலை செய்துகொண்டு இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் நடிகை பாவனி ரெட்டி இரண்டாவது திருமணத்திற்கு தயாராகியுள்ளார்.
நடிகை பாவனி ரெட்டி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்னத்தம்பி சீரியலில் நடித்து வருகிறார். அந்த சீரியலில் நந்தினி என்ற கேரக்டரில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
தெலுங்கு சீரியல் நடிகையான பாவனி ரெட்டி தமிழிலும் பிரபலமாகிவிட்டார். அதுமட்டுமின்றி சில படங்களிலும் நடித்துள்ளார்.
திருமண வாழ்க்கையில் குழப்பம்
நடிகை பாவனி ரெட்டி கடந்த 2013ஆம் ஆண்டு இவருடன் சீரியலில் நடித்த பிரதீப் என்ற நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து சந்தோஷமாக சென்ற இவர்களது வாழ்க்கையில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
கணவர் தற்கொலை
இருவருக்கும் ஏற்பட்ட குடும்பத் தகராறில் கடந்த 2017 மே மாதம் கணவர் பிரதீப் அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த பாவனி பின்னர் மீண்டும் சீரியலில் கவனம் செலுத்த தொடங்கினார்.
கண்ணீர்விட்ட நடிகை
இந்நிலையில் நமது பிலிமிபீட்டுக்கு நேர்காணல் அளித்துள்ளார் பாவனி ரெட்டி. அப்போது தனது கணவர் தற்கொலை குறித்து பேசிய அவர் கண்ணீர் விட்டு அழுதார். தான் மட்டும் சென்றிருந்தால் தனது கணவர் இந்நேரம் உயிரோடு இருந்திருப்பார் என்று கூறி கண்ணீர் விட்டார்.
கண்களில் வழிந்த கண்ணீர்
அவர் விளையாட்டுத்தனமாக செய்தது வினையாக முடிந்துவிட்டது என்றும் பாவனி கூறினார். தான் அழக்கூடாது என்ற வைராக்கியத்துடன் உள்ளேன் என்று கூறிய அவர் கண்களில் கண்ணீர் வழிந்ததை காண முடிந்தது.
குடும்ப நண்பருடன் திருமணம்
தொடர்ந்து பேசிய அவர் தான், இரண்டாவது திருமணத்திற்கு தயாராகிவிட்டதாக தெரிவித்துள்ளார். குடும்ப நண்பரான ஆனந்த் என்பவரை திருமணம் செய்துகொள்ள போவதாக கூறினார் பாவனி.
இதயத்துடிப்புடன் டாட்டூ
மேலும் தனது கையில் வறைந்துள்ள டாட்டூ குறித்து கேட்டதற்கு பதிலளித்த பாவனி, தனது முன்னாள் கணவர் பிரதீப் பெயரை ஹார்ட்டின் மற்றும் இதயதுடிப்புடன் வறைந்திருக்கும் டாட்டூவை காட்டினார். இதனை ஆனந்துதான் பரிசளித்தார் என்றும் கூறினார்.
வாழ்க்கை கொடுத்த ஆனந்த்
முழுக்க முழுக்க பெற்றோரால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் என்று அறிவித்துள்ள பாவனி, இம்மாதம் திருமணம் குறித்த தேதி அறிவிக்கப்படும் என்றார். தனது வாழ்க்கையே முடிந்து விட்டது என்று நினைத்திருந்த தனக்கு ஆனந்த் வாழ்க்கை கொடுப்பதாகவும் கூறினார்.
யாருக்கு தேங்க்ஸ்?
யாருக்கு சாரி சொல்ல விரும்புகிறீர்கள்? யாருக்கு தேங்க்ஸ் சொல்ல விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த பாவனி, தனது முன்னாள் கணவர் பிரதீப்புக்கு சாரியும் தனது வருங்கால கணவருக்கு தேங்க்ஸும் கூறினார்.
-
Baakiyalakshmi: கலர் கலராக சட்டைகள் போட்டு போட்டோஸ்.. பழனிச்சாமியின் புகைப்படங்களை பார்த்த பாக்கியா!
-
வேலுவுடன் கூட்டணி சேர்ந்த மனோகரி.. சிக்கலில் சிக்கும் சுடர்..நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!
-
Pandian stores 2: தூக்குச்சட்டிக்குள் பிணைந்த கைகள்.. ரொமான்ஸ் மோடில் சரவணன் -தங்கமயில்!